ஒதியம்பட்டு கோவிலில் குருபூஜை விழா 

புதுச்சேரி: ஒதியம்பட்டு வண்ணாரபரதேஸ்வர சுவாமி கோவிலில், (20ம் தேதி) குருபூஜை விழா நடக்கிறது.

வில்லியனுார் சாலை ஒதியம்பட்டு பகுதியில் வண்ணாரபரதேஸ்வர சித்தர் கோவில் உள்ளது. 234ம் ஆண்டு குரு பூஜையையொட்டி, கோ பூஜை, கணபதி ஹோமம் மற்றும் 108 சங்காபிேஷகம் நடந்தது.

முக்கிய நிகழ்வான (20ம் தேதி) காலை 7:00 மணிக்கு அகவல் பாராயணம் தொடர்ந்து, 9:00 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து பால் குடம், புனிதநீர் எடுத்து வந்து சுவாமிக்கு அபிேஷகம் மற்றும் தீபாராதனை செய்து குரு பூஜை நடக்கிறது.

மதியம் 12:30 மணிக்கு பசி ஆற்றுவித்தல் நிகழ்ச்சி, மாலை 5:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு 8:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Advertisement