பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலர்களை பார்த்ததும் பணத்தை வீசி விட்டு தப்பி சென்ற கட்சி நிர்வாகிகள் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் அரசியல் கட்சியினர் சிலர் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் புகார் சென்றது. இதையடுத்து நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். தேர்தல் அலுவலர்கள் வருவதை பார்த்ததும் அரசியல் கட்சியினர் பணத்தை கீழே போட்டு விட்டு ஓடினர். இதையடுத்து கீழே இருந்த ரூ. 26,500 பணத்தை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசிலும் புகார் அளித்தனர். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து பணத்தை வீசி சென்ற மர்ம நபர்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
மின்சார வாகன காத்திருப்பு காலம் 1 மாதம் வரை அதிகரிப்பு
-
கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 2 ஆண்டு சிறை
-
செங்கையில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு... கொஞ்சமும் அக்கறை காட்டாத மாவட்ட நிர்வாகம்
-
இன்று இனிதாக ... (22.04.2026) கோவை
-
காங்.,ல் பூசல் இல்லை வேட்பாளர்கள் மறுப்பு
-
ஆபத்தான இடத்தில் அரசு பள்ளி மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயக்கம்