மது குடித்து விட்டு வாகனம் ஓட்டிய 269 பேர் பிடிபட்டனர்

புதுடில்லி: டில்லி மாநகரில் நேற்று முன் தினம் இரவு போலீசார் அதிரடி சோதனையில், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டிய, 269 பேர் பிடிபட்டனர்.

வார இறுதி நாளான சனிக்கிழமை இரவில், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை டில்லியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டில்லி மாநகர் முழுதும் நேற்று முன் தினம் இரவு 9:00 மணி முதல் நள்ளிரவு வரை மூன்று மணி நேரம் போலீசார் அதிரடி ் சோதனை நடத்தினர்.

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி வந்த, 269 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், 38 பேரிடம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த ஆண்டில் ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று வரை, மது குடித்து விட்டு வாகனம் ஓட்டிய 7,478 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 6,844 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. மேலும், 634 பேரிடம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பைக் மற்றும் ஸ்கூட்டரில் செல்பவர்கள் தான் அதிகளவில் இந்த வழக்கில் பிடிபட்டுள்ளனர்.

இனி வரும் நாட்களில், நள்ளிரவிலும், வார இறுதி நாட்களிலும் மாநகர் முழுதும் தீவிரமாக வாகன சோதனை நடத்தப்படும் என டில்லி மாநகரப் போலீஸ் தெரிவித்துள்ளது.

Advertisement