'டிஜிட்டல் கைது' மோசடியை தடுக்க வருகிறது ஏ.ஐ., தொழில்நுட்பம்
புதுடில்லி: 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் ஆன்லைனில் நடக்கும் பண மோசடிகளை தடுக்க, ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும், 'அபய்' என்ற, 'சாட்பாட்'டை சி.பி.ஐ., இன்று அறிமுகப்படுத்துகிறது.
இதன் மூலம், தங்களுக்கு வரும் சி.பி.ஐ., நோட்டீஸ் உண்மையானதா என்பதை மக்கள் சரிபார்க்க முடியும்.
போலீஸ், அமலாக்கத் துறை, சி.பி.ஐ., என்ற பெயரில், மொபைல் போன் வீடியோ அழைப்பு மூலம் மக்களை மிரட்டி பணம் பறிப்பதே டிஜிட்டல் கைது எனப்படுகிறது. குறிப்பாக, மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது. நாடு முழுதும், டிஜிட்டல் கைது தொடர்பான புகார்களை, உச்ச நீதிமன்றஉத்தரவுப்படி, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
இந்நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிஜிட்டல் கைது மோசடியை தடுக்க, ஏ.ஐ., மூலம் இயங்கும், 'அபய்' என்ற, 'சாட்பாட்'டை சி.பி.ஐ., இன்று அறிமுகப்படுத்துகிறது.
டில்லியில் இன்று நடக்கும் விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் இதை அறிமுகம் செய்து வைக்கிறார்.
@block_B@
சி.பி.ஐ., பெயரில் வரும் நோட்டீஸ்கள் உண்மையானவையா என்பதை, இந்த, 'அபய்' சாட்பாட் மூலம் சரிபார்க்கலாம். இந்த சாட்பாட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி, உண்மையானதா அல்லது போலியானதா எனக் கேட்டால், உடனடியாக பதில் சொல்லி விடும். டிஜிட்டல் கைது மோசடி அதிகரித்து வரும் சூழலில், மக்களுக்கு இது முக்கிய பாதுகாப்பு கருவியாக அமையும்.block_B
மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்