எம்.எல்.ஏ., 'சீட்' தருவதாக ஏமாற்றினர்: ராமதாஸ் பேரன் முகுந்தன் ஆடியோவால் பரபரப்பு
-நமது நிருபர்-:
''எம்.எல்.ஏ., 'சீட்' தருவதாக ஏமாற்றினர்,'' என, ராமதாஸ் பேரனுடன், அன்புமணியின் ஆதரவாளர் பேசும் ஆடியோ, சமூக வலைதளத்தில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாசின் மகள் வயிற்று பேரன் முகுந்தனுக்கு, பா.ம.க., இளைஞர் சங்கத்தில், மாநில தலைவர் பதவி வழங்கியதுதான், பா.ம.க., இரண்டாக உடைவதற்கு காரணமாக அமைந்தது.
முகுந்தன் தனக்கு வழங்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்து, ராமதாசுக்கு துணையாக தைலாபுரம் தோட்டத்தில் இருந்து வருகிறார். ஏப்., 17ல் தைலாபுரம் தோட்டத்தில், ஒரே சமயத்தில், ராமதாஸ், மூத்த மகள் ஸ்ரீகாந்தி, பேரன் முகுந்தன் ஒன்றாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர்.
அதில் முகுந்தன் கூறும்போது, 'எனக்கு எம்.எல்.ஏ., சீட் தருவதாகவும், அதற்குண்டான செலவை ஏற்றுக்கொள்வதாகவும், அன்புமணி தரப்பினர் கூறினார். இதற்கான ஆதாரம், என்னிடம் இருக்கிறது.
அதை, விரைவில் வெளியிடுவேன். அன்புமணியை யாரும் நம்பாதீர்கள். அவர் பதவி வெறி, பணத்தாசை பிடித்தவர்' என, தெரிவித்தார்.
இந்நிலையில், அன்புமணி ஆதரவு பிரமுகரும், முகுந்தனும் உரையாடும் ஆடியோ ஆதாரம், சமூக வளைதளத்தில் பரவி வருகிறது. அதில், அந்த பிரமுகர் பேசுகையில், 'அன்புமணியிடம் கூறிவிட்டேன். உங்களுக்கு ஏதாவது ஒரு தொகுதியில் நிற்க வைத்து, எம்.எல்.ஏ.,வாக ஆக்குவதாகவும், அதற்கான செலவை அவரே ஏற்பதாகவும் கூறினார்.
உங்களுக்கு கட்சி பதவி வழங்குவது குறித்து, பின் பார்த்துக்கொள்ளலாம் என அன்புமணி கூறியுள்ளார்' என பேசுகிறார்.
அதற்கு முகுந்தன், பதில் ஏதும் கூறாமல், 'ஊம்' கொட்டுகிறார்.
தற்போது இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாதிரி குடும்பங்களில் எவரும் வேலை செய்து பிழைப்பதில்லை. சாதி அவர்களுக்கு சோறும், தண் ணியும், வாழ பங்களாவும் தருகிறது. வோட்டு போட்ட சாதிக்காரன் நடுத்தெருவில், ரேஷன் கடை வாசலில்..
ஆடியோவில் "ம்" என்று சொன்னது முகுந்தன் தான் என்று எப்படி முடிவு செய்தீர்கள்..... தேர்தல் நேரத்தில் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு.....தோல்வி மேல் தோல்வி ஏற்படுவதால் எதையாவது கோக்கு மாக்காக செய்து தன் இயலாமையை வெளிபடுத்தி கொண்டிருக்கிறார் ராமதாஸ்....!!!
வன்னியர் மக்களை வைத்து பிழைப்பு நடத்திய நாடகம் முடிந்துவிட்டது. பல ஆயிரம் கோடிகளை அய்யாவும் சின்ன நொய்யாவும் சேர்த்துவிட்டார்கள். பாமக இனி தேவையில்லை. வன்னியர் மக்கள் அனைவரும் தமிழ் தேசியத்தை ஆதரிக்க வேண்டும்.
ஒரு பரபரப்பும் இல்லை இது ஜோடிக்கப்பட்ட ஒன்று. ராமதாஸ் அரசியல் அஸ்தமனம் ஆகி விட்டது
Publicity Dramas by Selfish Divisive-Destructive Casteist Parties
ஆக, மொத்தம் திருட்டு திமுக வில் குடும்ப உறுப்பினர்கள் யாருமே பதவிக்கு வரமாட்டார்கள் என்று சொன்னது மாதிரியே, இந்த மரம் வெட்டி ஸாரி பாட்டாளி மக்கள் கட்சியும் சொன்னது. ஆனால் இரண்டு கட்சியுமே அதைச் செய்யவில்லை.
பாமக வன்னியர் கட்சியா இல்லை ராமதாஸ் குடும்ப சொத்தா என்று சந்தேகம் வருகிறது.
அன்புமணியே பேசியிருந்தாலும் இல்லை என வாதிடலாம். அவரின் ஆதரவு பிரமூகர் கதை எடுபடுமா?
கட்சியை விட பிடிவாதம் முக்கியம் என்று ராமதாஸ் நினைக்கிறார்.
மகாபாரத திருதராஷ்டிரர் நிலைமைமேலும்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
-
தி.மு.க, ஆட்சியில் விவசாயிகள் தொடர் பாதிப்பு: ஸ்ரீதர் வாண்டையார் குற்றச்சாட்டு
-
தி.மு.க., வேட்பாளர் கணேசன் ஓட்டு சேகரிப்பு