வடவர் படையெடுப்பை முறியடிப்போம்; சொல்கிறார் கமல்
கோவை: '' வாகை சூட வந்தால் வடவர் படையெடுப்பை முறியடிப்போம். வடக்கில் இருந்து வரும் துரோகத்தை நாம் தடுத்தே ஆக வேண்டும்,'' என்று ம.நீ.ம. தலைவர் கமல் கூறினார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து கமல் பேசியதாவது:கோவையில் 10 கி.மீ. நீள ஜி.டி.பாலத்தைப் பார்த்துப் பெருமையடைந்தேன். ஆனால், மத்திய அரசோ மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்களுக்கு வேண்டிய இடங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொடுக்கிறது. இதுதான் அவர்களின் நீதி. வடக்கிலிருந்து வரும் துரோகத்தை நாம் தடுத்தே ஆக வேண்டும்.
தி.மு.க.வை ஓழிப்பேன் என்று சொல்லுபவர்களுக்கு பின்னால் ஒரே ஒரு முதலாளி இருகிறார். அவர் வடக்கே இருக்கிறார். அவரது அனுமதியுடன் அவரது மதியுடன் இவர்கள் செயல்படுகின்றனர். மதுரை வந்த மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''எங்களுக்கு ஓட்டு போட்டால் எல்லாம் செய்வோம்'' என்று பேசி இருக்கிறார். இதற்கு பெயர் வாக்குறுதியா? பிளாக் மெயிலா? இந்த மிரட்டல் எல்லாம் தமிழகத்தில் நடக்காது. தமிழகத்தின் மிரட்டல் எப்படி இருக்கும் என்பதை லோக்சபாவில் இப்போது செய்து காட்டி இருக்கிறோம்.நாம் வந்தாரை வாழ வைப்போம், வாகை சூட வந்தால் வடவர் படையெடுப்பை முறியடிப்போம். வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் தமிழர்கள். ஆனால் சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள்.
இந்த தேர்தலில் மக்கள் அதை செய்து காட்டுவார்கள்.கோவை தெற்கு தொகுதி நான் போட்டியிட்ட தொகுதி. நான் இந்த தொகுதி மக்களை மறக்கமாட்டேன். 50 ஆயிரம் ஓட்டுக்களை எனக்கு அளித்த அன்பான மக்கள். நான் உறுதியாக சொல்கிறேன், எனக்கு ஓட்டு போட்ட அத்தனை பேரும் இந்த முறை செந்தில் பாலாஜிக்கு வாக்களிப்பார்கள்.தமிழக அரசியல் வரலாற்றில் கோவை ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கப்போதுகிறது. தி.மு.க.வுக்கு சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை இருப்பது போல் இங்கேயும் ஒரு கோட்டை உருவாக போகிறது. அதற்கான திட்டம் நடக்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
இவரது படங்களில் நடிப்பவர்கள் பலர் குறிப்பாக, எப்படி வேண்டுமானாலும் உடலழகைக் காட்டத் தயங்காத அழகான பல பெண்கள் அவர்களுடன் நடிக்க வேண்டுமென ஐவரும் ஏங்குகிறார் வடமாநிலத்தவர் இங்கே பனி புரியும் பல அன்றாட வேலைக்காரர்கள் வட மாநிலத்தவரே அவர்களுடன் பேசப் பழக நமக்கு இந்தி தெரிய வேண்டுமென்பதால் நாமே இந்தியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறோம் இதில் வடவர் படையெடுப்பை எங்கே எப்படி முறியடிப்பது?
அடிமைகளுக்கெல்லாம் அடிமைகளா இருப்பதுதான் சௌகரியம் .
பாஜக வந்தால் மக்களுக்கு நல்லது நடக்குமோ இல்லையோ இவனுக்குளுக்கு அழிவு தான் என்று தான் தெரிஞ்சிட்டானுக.
ஓட்டுபோடும் தொகுதிக்கு தான் திமுகவே நல்லது செய்யும். அதே மாதிரி தான் ஒட்டு போடும் மாநிலத்திற்கு தான் மத்திய அரசு சலுகைகள் கொடுக்கும். இதெல்லாம் இயற்கை தான். பிஜேபிக்கு ஓட்டுபோடாவிடில், தமிழகத்திற்கு ஒன்றும் கிடைக்காது. இது சலுகை கிடைக்காது என்றும் எடுத்துக்கொள்ளலாம். மிரட்டல், ப்ளாக்மெயில் என்றும் எடுத்து கொள்ளலாம். எல்லாம் ஒரே அர்த்தம் தான். அப்பாவிற்கு பிடித்த பிள்ளையாக இருந்தால் தான் சலுகைகள் கிடைக்கும்.
தெலுங்கு படையெடுப்பையும் ஆதிபத்தியத்தையும்......
இவர்களுடைய வடக்கு துவேஷ பேச்சுக்கள் ஏச்சுக்கள் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் வடமாநில கட்சிகளை படுகுழியில் தள்ள பாஜகவுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். வடக்கு எதிர்ப்பை வைத்து தமிழகத்தில் ஓட்டுகளை அள்ளுவது சாத்தியம் என்றால் அதையே சுட்டிக்காட்டி வடமாநிலங்களில் பாஜக ஆதரவை அமோகமாக பெருக்கிக் கொள்ள முடியும்.
வட இந்தியாவிலும் மற்றும் உலகின் பல நாடுகளிலும் - தமிழர்கள் பல லக்ஷக்கணக்கில் பணி செய்து தமிழ்நாட்டின் IMAGE ஐயும் புகழையும் பரப்பிவருகிறார்கள்.
உங்களைப்போன்ற பிரிவினைவாதிகளால் அவர்களுக்கு தீங்கு ஏற்படலாம்.
எதை பேசினாலும் பின்விளைவுகளை யோசித்து பேசவும்.
இன்றைய காலகட்டத்திற்கு உணகவத்தில், கட்டிட தொழில், சாலை போக்குவரத்து, சென்னையில் தற்பொழுது நடந்துகொண்டுள்ள மெட்ரோ ரயில் பணிகள் வடவர் இல்லையெனில் இந்த பணிகளின் நிலை என்ன என்று மைய்யர் கூறினால் சற்று தெரிந்துக்கொள்வோம்., மதச்சார்பு அற்ற கொள்கை மட்டும் பேசினால் போதாது தேசிய ஒருமைப்பாடு பற்றி கொஞ்சம் பேசுங்கள்.
அறைய்ய ஆயித்தியமா முழு பசயித்தியமா என்று கண்டு பிடியுங்கள். இந்தியாய்ய்ய சரளமான பேச கூடியவன். பாராளுமன்றத்தில் பேச விட்டால் அங்கேயும் தீ மு கா நண்பர்களெ அவர்கள் பலர் தலையை சொரிந்து கொண்டு அர்த்தம் புரியாமல் விழிக்கிறார்கள்.
நீ எல்லாம் ஒரு மனுஷனாடாமேலும்
-
அதிகாரங்களை ஏவி என்னை மிரட்ட முடியாது; விஜய்
-
திமுக கூட்டணியில் இணைந்ததுக்கு காரணம் என்ன; உண்மையை உடைத்த கமல்
-
தமிழகத்தை மீட்டெடுக்கவே சில காலம் தேவைப்படும்; திமுகவை விளாசிய அண்ணாமலை
-
இன்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்கிறது; தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவு
-
சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள்; முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு
-
திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி சிக்கியது