சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள்; முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு
சென்னை: தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம் விட்டுப் பேசியுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.
















ஆபத்தானவன்
அப்படிப்பட்ட தலைவருடன் என்னை ஒப்பிடுகையில், தமிழகத்தை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், நம்முடைய வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் என்னைக்குமே ஆபத்தானவன் தான். அந்த வகையில் கருணாநிதியை விட ஒரு படி மேலே இருப்பது எனக்கு பெருமை தான். இதெல்லாம் நம் தமிழர்களின் ரத்தத்திலேயே உள்ளது.
எப்போதும் தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய அரசை எதிர்த்து சண்டை செய்ததை பெருமையாக கருதுகிறேன். சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள். எந்த மாநிலமும் தொடாத இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் தொட்டு இருக்கிறது. இன்னும் உயரம் தொடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சில குறைகள்
எல்லா வகையில், நாம் முன்னேறி இருந்தாலும் சில குறைகள் இருக்கின்றன என்பது எனக்கு தெரியும். ஏனென்றால் மக்களின் கருத்துகளையும் நான் காது கொடுத்து கேட்கிறேன். ஆனால், குறைகளாக சொல்லப்படும் சில விஷயங்களில் கூட மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் நாம் சிறப்பாகவே இருக்கிறோம்.
ஆனால், அந்த குறைகளையும் சரி செய்ய நாம் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். அதன் விளைவுகளை இன்னும் சிறிது நாட்களில் நாம் பார்ப்போம். மத்திய பாஜ அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு முதல் எதிர்ப்பை பதிவு செய்தது திமுக. நான் மசோதா நகலை கொளுத்தினேன்.
பற்ற வைத்த நெருப்பு
நாம் பற்ற வைத்த நெருப்பு தான் தொகுதி மறுவரையறை மசோதாவை சாம்பலாக்கியது. தேர்தல் நடக்கும் நேரத்திலேயே தொகுதி மறுவரையை எனும் மசோதா மூலம் மத்திய அரசு நம்மை வஞ்சிக்கிறது என்றால், இந்த தேர்தலில் அவர்களது ஆதரவாளர் இபிஎஸ் ஜெயித்துவிட்டால் என்னென்ன கொடுமைகள் எல்லாம் இங்கு அரங்கேறும் என நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. பாஜ மாதிரியான மதவாத சக்திகள் திமுகவை ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என பொய்யான பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், திமுக ஒருபோதும் ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல.
அப்பா ஸ்தானத்தில்
திமுக இந்து விரோதி என்பது போல ஒரு தோற்றத்தை சித்தரிக்கின்றனர். அதேநேரம், சிறுபான்மை மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் திமுக எப்போது களத்தில் நிற்கும். கருணாநிதியின் மகனான ஸ்டாலின் இன்று அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன். இப்போதும் ஒரு பிரச்னை என்றால் எதிர்த்து நிற்பவன் தான் இந்த ஸ்டாலின். எந்த பிரச்னை வந்தாலும் தமிழகத்தையும், தமிழர்களையும் பாதுகாத்து நிற்பேன். இது என்னுடைய உறுதிமொழி.
எந்த வகையில் வந்தாலும், எத்தனை முறை முயற்சி செய்தாலும் திமுக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜகவும், அவர்களது கொடூரமான சித்தாந்தங்களும் ஜெயிக்க முடியலன்னு வரலாறு சொன்னா போதும். அதுமட்டும் போதும். உங்களிடம் உரிமையோடு கேட்கிறேன். மீண்டும் நல்லாட்சி தொடர உதய சூரியன் சின்னத்திலும், கூட்டணி கட்சிகளின் சின்னத்திலும் ஓட்டளித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
@block_G@
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் தொகுதியில் நடந்து சென்று, பொதுமக்களை சந்தித்து திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார். சாலையில் நடந்து சென்ற மக்களிடம் கை குலுக்கியும், புகைப்படம் எடுத்தும் முதல்வர் ஸ்டாலின் மகிழ்ந்தார்.block_G
சமூக அநீதியுடன் கூடிய எங்கள் வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள் முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு. இப்படி படித்தால் அதன் உண்மை அர்த்தம் விளங்கும்.
ஏதோ யூடியூபில் ரெண்டு பாட்டு கேக்கலாம்னு போனா, விடியலும், ரெட்ட எலையும் போட்டிப் போட்டுக்கிட்டு விளம்பரம் குடுத்து தாக்கறாய்ங்க. இவிங்க அடிச்ச பணத்தை கூகுள் காரன் சாப்புடறான்.
வீடியோ ங்குறது செட்டப் தானே. சினிமா மாதிரி தானே. போலி தானே? சினிமா வுல கதாநாயகன் மேலேயிருந்து குதிக்குறதது நெருப்பு வளையத்துக்குள்ள அனாயசமாக நுழையுறது எல்லாமே டூப்ளிகேட் ஆளு தானே பண்ணுவான்? அப்பறம் என்ன பெரீய்ய வீடியோ வெளியீடு?
இளம் பெண்களிடம் மட்டும் செல்பி எடுக்க வேண்டியது. வயதான ஏழைப் பெண் காலில் விழுந்தால் இடது கையால் பிடித்து தள்ள வேண்டியது. சிறு குழந்தையுடன் ஆசையாக ஆண் நெருங்கினால் துரத்தி அடிப்பது.இதெல்லாம் நியாயமா அப்பா?
தமிழகத்தின் , ஏன் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பம் என்றல் அது உங்களின் குடும்பத்தான் ஸ்டாலின் அவர்களே , இதனை தமிழக வாக்காளர்கள் உணர்ந்தால் அவர்களின் மீதிருக்கும் கடனை அடைக்க சொல்லி உங்களுக்கு எதிராக வாக்கினை பதிவு செய்வார்கள் , இல்லையா அவர்களுக்கான சவப்பெட்டியை தயார் செய்து தீவிரவாத மதத்துக்கு நீங்க ஆதரவலிங்க என்று விட்டுவிடுவார்கள் , பார்ப்போம் நேபோட்டிசம் vs ஜனநாயகம்
நாடு தாங்குமா? மக்கள் தாங்குவார்களா? ஏதாவது நாட்டில் மிஞ்சுமா?
மத்திய அரசு தமிழர்களை வஞ்சிக்காது. அவர்கள் இந்திய குடிமக்கள். தமிழக வளர்ச்சி சேர சோழ பாண்டிய மன்னர் காலத்திலே உருவாகி விட்டது. தொகுதி மறு வரையறை எப்படி , எதன் அடிப்படையில் இருக்க வேண்டும்? திமுக நாத்திக கொள்கைக்கு ஆதரவு. இந்துக்கள் எதிரிகள் தான். சிறுபான்மை மக்களுக்கு காங்கிரஸ், திமுக அளவற்ற சலுகைகள் கொடுத்து வருகிறது.
சிறுபான்மை ஆதிக்கம் வேகமாக பரவுகிறது. வில்சன் கருணாநிதி நகர்? முஸ்லிம் பஜார். , சிக்கந்தர் மலை என்று தாங்களே பெயர் மாற்றம் செய்து வருகின்றனர். ? திமுக, காங்கிரஸ் வென்றால், அந்நிய சாம்ராஜ்யம் தமிழகத்தில் உருவாகி விடும்?
அப்பாடி.இன்னிக்கு சாயங்காலம் 6 மணிக்கு மேலே பாட்டுத்தொல்லை இருக்காது.அய்யோ சாமி.முடியல.காதுல ரத்தமாக வருது
60 வருடமா இருந்த 5 லட்சம் கோடி கடனை 5 வருஷத்தில் 11 லட்சம் பண்ணி சாதனை பண்ணின தீயமுக்கவிற்கு வோட்டு போட்ட அடுத்த 5 வருஷத்தில் 22 லட்சம் கோடி கடன் பண்ணி சாதனை பண்ணுவார், தமிழ் நாட்டு மக்களே யோசிப்பீர்
வாக்காளர்களே, இந்த வாரிசு அரசியல், குடும்ப ஆட்சியை ஹூக்கிங் எறியவும். சூறை ஆடியது போதும். மாடல் ஆட்சி ஒரு தில்லு முள்ளு ஆட்சிமேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்