செல்வப்பெருந்தகை நாடகம்; அம்பலமாக்கியது வருமான வரித்துறை!
நமது சிறப்பு நிருபர்
சோதனை என்ற பெயரில் வருமான வரித்துறையினர், வீட்டில் தன்னை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக செல்வப்பெருந்தகை புகார் கூறிய நிலையில், சோதனையே நடத்தவில்லை என்று வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் அவரது நாடகம் சில மணி நேரங்களில் அம்பலமாகியுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்துள்ள நிலையில், வருமான வரித்துறையினர் ஹிந்தி பேசும் அதிகாரிகளைக் கொண்டு 'சோதனை' என்ற பெயரில், ஸ்ரீபெரும்புதூர் சட்டசபைத் தொகுதிக்குள் என்னை சட்டவிரோதமாக முடக்கினர்.
பிரசாரத்திற்கு செல்ல விடாமலும், எனது அரசியல் கடமைகளை செய்ய விடாமலும் சோதனை என்ற பெயரில் என்னை சிறைபிடித்து வைத்துள்ளனர். மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் அழுத்தத்தின் கருவிகளாகப் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது, அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு செல்வ பெருந்தகை கூறியுள்ளார்.
இதே விஷயத்தை வீட்டுக்கு வெளியே நின்று பேட்டியும் கொடுத்தார்.
@block_G@
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ''தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையின் பிரசாரத்தை முடக்க நினைக்கும் சதிக்குக் கடும் கண்டனம்; இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் மத்திய பாஜ அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். block_G
ஆனால், சில மணி நேரங்களிலேயே செல்வப்பெருந்தகையின் நாடகத்தை வருமான வரித்துறை அம்பலமாக்கியது. தாங்கள் சோதனையே நடத்தவில்லை என்றும், அவர் சொல்வதில் உண்மையில்லை என்றும் வெட்டவெளிச்சமாக்கியது.
@block_G@
இது குறித்து வருமான வரித்துறை கூறியதாவது: செல்வ பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை. ராகுலின் பிரசாரத்திற்கு செல்ல விடாமல் தடுத்ததாக, செல்வபெருந்தகை கூறுவது உண்மையில்லை. அவரது வீடு உள்ளிட்ட எங்கும் சோதனை நடத்தவில்லை. இவ்வாறு வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. block_G
செல்வப் பெருந்தகை நாடகம் அம்பலம் ஆகியது வருமானவரித்துறை எச்சரிக்கை இப்படி ஒரு அண்ட புளுகு ஆகாச புளுகு யாருமே பார்த்திருக்க மாட்டீங்க காரணம் வருமான வரித்துறை செல்வப் பெருந்தகை வீட்டில் சோதனை செய்யவில்லை அப்படி இருந்தும் வருமானவரித்துறை சோதனை செய்து என்னை சிறை பிடித்து வைத்துள்ளனர் என்று செல்வபெருந்ததை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார் அதோடு மட்டுமல்ல தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால் சோதனை என்ற பெயரில் என்னை சட்ட விரோதமாக முடக்கி வைத்துள்ளனர் என்று அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார் இந்த செல்லப் பெருந்தகை இவர் மேல ஏற்கனவே கொலை குற்றம் ஆள் கடத்தல் கட்டப்பஞ்சாயத்து இப்படி ஏகப்பட்ட குற்றம் சாட்டப்பட்டு காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை . ஆனால் ஏன் இந்த செல்லப் பெருந்தகையை காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக நியமித்தது ஏன் செல்வப் பெருந்தகையை விட செல்வாக்கான ஆட்கள் நிறைய பேர் காங்கிரஸ் கட்சியில் உள்ளார் அவர்களை தலைவர் ஆக்காமல் இந்த செல்வப் பெருந்தகை ஆக்கியது ஏன்..
மானம் கெட்டவர்
அண்டப்புழுகன்
உண்மை எது என்று தெரிந்து கொள்ளாமல் ஒருவர் வாயிலேயே வடை சுட்டுவிட்டார். இவர்களெல்லாம் நம் தலைவர்கள். எல்லாம் நம் தலையெழுத்து.
மடியில் கனமிருந்தால் வழியில் பயம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
பழத்தை தின்றுவிட்டு நான்கு முழம் கயிரை எடுத்துக்கொண்டு முச்சந்திக்கு போகலாம் என்ன பொழப்பு
ஹலோ செல்வபெருங்கதை..நீ காமெடி பண்ண எங்க முதல்வர் தான் கிடைத்தரா
செல்லாபெரும்தொகை ஒரு உணமையான திமுகவின் தொண்டன் என்பதை அன்றாடம் வெளிப்படுத்திகிறார். மொழிபெயர்ப்பில் கருணாநிதியின் தத்துபிள்ளை தங்கபாலுவை பின்னுக்கு தள்ளி முன்னேறிவிட்டார்
உங்கள் பதவி மே 4 அன்று பறிக்கப்பட உள்ளதாமே ?
ஏழு கட்சி மாறிமேலும்
-
மாதர் தம்மை மகிமைப்படுத்தும் 'பிங்க்' வண்ண வாக்குச்சாவடிகள்
-
ஓட்டுச்சாவடிகளில் பந்தல், குடிநீர் வசதி; அதிகாரிகள் தீவிரம்
-
பிரதான கால்வாய் புதுப்பிப்பு எப்போது? வாக்குறுதி மட்டும் மாறல
-
வெயிலோடு விளையாடாத குழந்தைகளின் எலும்புக்கு பாதிப்பு; டாக்டர்கள் எச்சரிக்கை
-
ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
-
சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவிற்காக காஞ்சி ராஜாஜி மார்க்கெட்டிற்கு நாளை விடுமுறை