100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு

கோவை: சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை ஊக்குவிக்கும் வகையில், வேளாண் பல்கலையில், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மாணவர்கள் பதாகைகளை ஏந்திச் சென்று, ஓட்டுப்போடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

மாணவர் நல மைய டீன் ராமலிங்கம், பேரணியைத் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், “ஓட்டுப்போடுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. முதன்முறையாக ஓட்டுப்போட உள்ள மாணவர்கள் இந்த பெருமிதமான வாய்ப்பைத் தவறவிடக்கூடாது,” என்றார்.

பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல்காளை, திட்ட அலுவலர்கள் சிவகுமார், சந்திரகுமார், மாலதி, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement