அண்ணன், அண்ணியை கொன்று தற்கொலைக்கு முயன்ற தம்பி

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கீரிபட்டியை சேர்ந்த மாயாண்டி என்பவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் பழனிசாமி, 55; இரண்டாவது மகன் சுப்பிரமணி, 50. பழனிசாமி, தன் மனைவி ஈஸ்வரியுடன் வடமாநிலத்தில் தோசை கடை நடத்தினார். இவருக்கும், சகோதரர் சுப்பிரமணிக்கும் சொத்து தகராறு இருந்தது.

பங்குனி பொங்கல் திருவிழா மற்றும் தேர்தலில் ஓட்டு போட, கீரிபட்டிக்கு பழனிசாமி வந்தார். முன்விரோதத்தில் இருந்த சுப்பிரமணி, நேற்றிரவு 7:00 மணிக்கு, பழனிசாமி வீட்டுக்கு சென்று, வீட்டின் முன்பாக இருந்த ஈஸ்வரியை வெட்டி கொலை செய்தார்.

பின், கீரிபட்டி மந்தையில் அமர்ந்திருந்த பழனிசாமியையும் வெட்டி கொலை செய்தார். அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டதையடுத்து, அரிவாளால் தன் தலையிலும் வெட்டிக்கொண்டார்.

உசிலம்பட்டி போலீசார், சுப்பிரமணி வைத்திருந்த அரிவாளை கைப்பற்றி, காயமடைந்த அவரை, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Advertisement