காத்திருந்த கார்த்தி எம்.பி.,; கண்டுகொள்ளாத சீமான்
காரைக்குடி தொகுதியில் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் நடைபயணமாக சென்று போலீஸ் காலனி, அண்ணா நகர் பகுதியில் காங். , வேட்பாளர் மாங்குடிக்காக நேற்று ஓட்டு சேகரித்தார்.
காரைக்குடி அழகப்பர் வாக்கர்ஸ் கிளப்பில், சீமான் நேற்று ஓட்டு சேகரிக்க வந்தார். கிளப் நிர்வாகிகளிடம் பேசிய பின், அவர் நடைபயிற்சி மேற்கொண்டு ஓட்டு சேகரித்தார். சீமான் வந்த சிறிது நேரத்திலேயே காங்., வேட்பாளர் மாங்குடிக்கு ஓட்டு சேகரிக்க எம்.பி., கார்த்தியும் வந்தார். இருவரும் ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சீமான் வந்ததை அறிந்த கார்த்தி, அவரை சந்திக்க, வாயிலில் 15 நிமிடங்கள் காத்திருந்தார். ஆனால் தொண்டர்கள் சூழ வந்த சீமான், கார்த்தி காத்திருந்த இடம் அருகே நின்று சில நிமிடங்கள் யோசித்து விட்டு, உடனடியாக அங்கிருந்து சென்றார். இதனால் கார்த்தி ஆதரவாளர்கள் கடுப்பாயினர்.
மேலும்
-
அலுவலகத்தில் லட்சணக்கணக்கான பணம் பறிமுதல்; காங் எம்பி கார்த்தி சமாளிப்பு
-
அதிகாரங்களை ஏவி என்னை மிரட்ட முடியாது; விஜய்
-
திமுக கூட்டணியில் இணைந்ததுக்கு காரணம் என்ன; உண்மையை உடைத்த கமல்
-
தமிழகத்தை மீட்டெடுக்கவே சில காலம் தேவைப்படும்; திமுகவை விளாசிய அண்ணாமலை
-
இன்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்கிறது; தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவு
-
சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள்; முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு