காத்தாடிய ரோடு ஷோ; கடும் கோபத்தில் அமித் ஷா

8

மொடக்குறிச்சி மற்றும் சென்னையின் தி.நகரில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, நேற்று முன்தினம் ரோடு ஷோ வாயிலாக பிரசாரம் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

இந்த ரோடு ஷோ, மிகப் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, லட்சக்கணக்கில் ஆட்களை திரட்ட முடிவெடுக்கப்பட்டது. அதற்காக, இரண்டு லட்சம் பேரை திரட்டி வரும் பொறுப்பு, கட்சியின் மண்டலப் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு லட்சம் பேருக்கும், தலா 400 ரூபாய் என கணக்குப் போட்டு, மொத்த தொகையும் கொடுக்கப்பட்டது.

ஆனால், அமித் ஷாவின் ரோடு ஷோவுக்கு வந்தவர்களே 400 பேர் தான் என்பதால், பா.ஜ., நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரோடு ஷோவில் கலந்து கொண்ட அமித் ஷாவும், கூட்டம் இல்லாததால் கடும் கோபம் அடைந்துள்ளார். தன் அதிருப்தியை கட்சி நிர்வாகிகளிடம் தெரிவிக்க, கூட்டத்தை கூட்டுவதாகச் சொல்லி ஏமாற்றிய நபரின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement