அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு

தேனி:தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள், போலீசாருக்கு கணினி குலுக்கல் முறையில் 3ம் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். பொதுப்பார்வையாளர்கள் பீம்சிங், வினய் பிரதாப்சிங், போலீஸ் பார்வையாளர் சிவபிரகாஷ் தேவராஜ், எஸ்.பி., சினேகப்பிரியா முன்னிலை வகித்தனர்.டி.ஆர்.ஓ., ராஜகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement