பொய்யான குற்றச்சாட்டு கூறி நாடகம்; செல்வப்பெருந்தகை மீது வருமான வரித்துறை போலீசில் புகார்
சென்னை: தனது வீட்டில் சோதனை என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாக பொய்யான தகவலை கூறிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது போலீஸ் மற்றும் தேர்தல் கமிஷனில் வருமான வரித்துறை புகார் தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில், ஹிந்தி பேசும் அதிகாரிகளால், தான் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி காங்., வேட்பாளருமான செல்வப்பெருந்தகை கூறியது தவறானது என வருமான வரித் துறை தரப்பு தகவல் சொல்ல, இவ்விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகி உள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தனது வீட்டில் வருமானவரித்துறை சோதனை என்ற பெயரில் தன்னை சிறைபிடித்துள்ளதாக சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டார். கீழ்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக நேரில் பேட்டி கொடுத்தார்.
ஆனால், அந்த அறிக்கையும், பேட்டியும் ஆய்வு செய்யப்பட்டது. அதில், அவரது குற்றச்சாட்டு தவறு. ஆதாரமற்றது. நேற்றோ அல்லது சமீபத்திலோ செல்வப்பெருந்தகை மற்றும் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை. அவர் கூறியபடி கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட எந்த இடத்திலும் சோதனை நடத்தப்படவில்லை.
ஸ்ரீபெரும்புதூரில் சில இடங்களில் கணக்கில் வராத பணம் நடமாட்டம் குறித்து கிடைத்த தகவலின்படி அதிகாரிகள் அந்த இடங்களில் மட்டும் ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் செல்வப்பெருந்தகை சம்பந்தப்பட்ட எந்த இடமும் தொடர்புபடுத்தவில்லை. மேலும் நேற்று நடந்த ஆய்வுகளில் எந்த ஆதாரமும் கிடைக்காததால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பொய்யான மற்றும் தவறான அறிக்கை வெளியிட்ட செல்வப்பெருந்தகை மீது தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அரசின்துறை குறித்து அவதூறான குற்றச்சாட்டுகளை கூறியதற்காகவும், பொய்யான தகவலை அளித்ததற்காகவும் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (20)
M Ramachandran - Chennai,இந்தியா
21 ஏப்,2026 - 23:49 Report Abuse
அப்போ ராகுல் கழற்றி விட தயாராகி விட்டார் என்று தான் கொள்ள வேண்டும். 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
21 ஏப்,2026 - 22:06 Report Abuse
கருணாநிதியையே மிஞ்சும் வகையில் செல்லாப்பெறும்தொகை செயல்படுவதால் ஒரு பெண் தலைமையில் புதிய திமுக உருவாக வாய்ப்பிருக்கிறது. என சூடான பேச்சுக்கள் அடிபடுகின்றன . 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
21 ஏப்,2026 - 21:54 Report Abuse
அது மன்னிவாக்கம் செல்வம் இது செல்லாச் சிறுதகை 0
0
Reply
srinivasan - chaennal,இந்தியா
21 ஏப்,2026 - 21:29 Report Abuse
திமுகவுடன் சேர்ந்த பிறகு இப்படி ஏதாவது ஏமாற்று வேலை பார்த்தால்தான் இருக்கும் இடம் தெரியும் இல்லை என்றால் வேறு தலைவர் வந்து விடுவார் 0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
21 ஏப்,2026 - 21:24 Report Abuse
வருமான வரித்துறை கழக காவல் துறையில் கொடுத்த புகார் மனு இந்நேரம் மேக்கிங் குப்பையில் இணைந்திருக்கும். 0
0
Reply
Tiruvarur Tamil Nadu Indian - Tiruvarur,இந்தியா
21 ஏப்,2026 - 21:24 Report Abuse
ஆய்வு செய்த அந்த சில இடங்கள் யாருடையது ? 0
0
Reply
renga rajan - ,இந்தியா
21 ஏப்,2026 - 21:11 Report Abuse
தன்னுடைய வேறு செய்தி வராமலிருக்க அவன் விட்ட கப்சா தான் 0
0
Reply
கிரிமினல் பெருந்தகை - ,
21 ஏப்,2026 - 20:54 Report Abuse
இவரை கைது செய்து தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும். தவரான தகவல் தந்து அரசு எந்திரங்களை நசுக்க முயற்சி 0
0
Reply
Tiruvarur Tamil Nadu Indian - Tiruvarur,இந்தியா
21 ஏப்,2026 - 20:53 Report Abuse
அப்போ ஆய்வுக்கு தான் வந்தார்கள் என்றால் , அதை எவ்வாறு கூறவேண்டும் 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21 ஏப்,2026 - 20:51 Report Abuse
மூஞ்சியும், முகரையும். 0
0
Sivaprakasam Chinnayan - ,இந்தியா
21 ஏப்,2026 - 21:20Report Abuse
வருமானத்துறை மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அவர்கள் ஏன் ஆய்வுக் வந்தார்கள் அதுவும் தேர்தல்சமயத்தில் தேர்தல் முடிந்ததும்ஆய்வு செய்ய வேண்டியது தானே
அப்பொழுது தாமரை மலர்ந்திருக்குமே 0
0
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
21 ஏப்,2026 - 21:43Report Abuse
அட சின்ன பயலே அவங்க ரெய்ட் வரவே இல்லயாம் 0
0
Reply
மேலும் 8 கருத்துக்கள்...
மேலும்
-
ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளித்த 103 வயது முதியவர், மூதாட்டி
-
திருப்போரூர் தொகுதியில் ஓட்டளித்த மக்கள்
-
வயலுாரில் இயந்திரம் பழுது :தாமதமாக ஓட்டுப்பதிவு
-
கிராமங்களில் ஆர்வமுடன் ஓட்டு போட்ட மக்கள்
-
ஓட்டுப்போட படகில் ஆபத்து பயணம் :தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் அவலம்
-
பூந்தமல்லி பசுமை ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
Advertisement
Advertisement