230 வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்.,  கருவி

திண்டுக்கல்:ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்லும் 230 வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தும் பணிகள் துவங்கின.

மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் உள்ள 2301 ஓட்டுச்சாவடிகளிலுக்கும் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகங்களில் இருந்து சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்ட ஓட்டுப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்களை எடுத்து செல்லும் 230 வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணிகள் நடந்தது. இதை மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் ஆய்வு செய்தார். இதோடு வாகனங்களில் செல்லும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர், போலீசாருக்கும் சுழற்சி முறை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

Advertisement