கூரியர் ஊழியரை கடத்தி தாக்கிய 4 பேர் கைது
ஆம்பூர்: திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் கபில் அகமது, 34. இவர், அப்பகுதியில் உள்ள, கூரியர் நிறுவனத்தில் பணி-யாற்றி வருகிறார். நேற்று முன்தினம் தன் பைக்கில் நேதாஜி ரோட்டில் சென்றார்.
எதிரே வந்த ஆம்பூர் வாத்திமனையை சேர்ந்த ஜூல் பீகரலி, 30, என்பவர் ஒட்டி வந்த பைக்கும், கபில் அகமதுவின் பைக்கும் மோதின. இதில் ஜூல் பீகரலி, தன் தம்பியான கபில், 28, என்-பவருக்கு போன் செய்து, விபத்து குறித்து தகவல் தெரிவித்தார். கபில், தன் நண்பர்களான ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப் பகுதியை சேர்ந்த ஸ்மைல், 23, தவ்ஹீப், 27, ஆகியோருடன் காரில் சம்பவ இடம் வந்து, கூரியர் ஊழியர் கபீல் அகமதுவை காரில் கடத்திச்-சென்று, ஜூல் பீகரலி உட்பட, 4 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர். புகார் படி, ஆம்பூர் டவுன் போலீசார், ஜூல்பிகரலி, கபில், ஸ்மைல், தவ்ஹீப் ஆகிய, 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும்
-
போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த வாய் திறக்காத விஜய்: பதறும் பெற்றோரின் பரிதவிக்கும் கேள்வி!!
-
தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்
-
ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி; ஓசூர் அருகே கோர விபத்து
-
திருவண்ணாமலையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி