'தேர்தல் முடிவுக்கு பின் கட்சியை காப்பாற்ற மோடி, அமித் ஷா காலில் தி.மு.க., விழும்': விஜய்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், விஜய் பேசியதாவது:
எம்மதமும் நம் முகம் என்பதுதான் விஜயின் முகம். சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற, ஒரு பக்கம் காங்கிரசுடன் கூட்டு வைத்து, தி.மு.க., கதர் வேஷம் போடுகிறது; மறுபக்கம், பா.ஜ.,வுடன் மறைமுக கூட்டணி அமைத்து, காவி வேஷம் போடுகிறது.
தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும், ரகசிய தொடர்பு உள்ளது என, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சொன்னது, இன்று இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதை, இப்போது சொல்கிறார்.
தேர்தல் முடிவுக்கு பின், கட்சியை காப்பாற்ற, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காலில் தி.மு.க., நிச்சயம் விழும். பா.ஜ.,வின் முதல் அடிமை யார் என்பதில், தி.மு.க., - அ.தி.மு.க.,இடையே போட்டி நடக்கிறது.
பிரச்னையென்றால் விஜய் வெளியே வரமாட்டார் என, 10 முறை தோற்றுப்போன பின்னும் திருந்தாத ஒருவர், சும்மா நசநசவென்று பேசுகிறார். அய்யா அனுபவசாலி, சேலத்தில் பதுங்கி கொள்ளாமல் வெளியே வந்து, ஒரு தொகுதியில் நின்று காட்டுங்கள். முதலில் அதை செய்துவிட்டு, பேசுங்க பாஸ். சொந்த தொகுதியான இடைப்பாடியில் தோற்றுப்போய் விடுமோ என பயந்துதான், என் சின்னத்தை திருடினீர்கள்.
தி.மு.க.,வுக்கும் அ.தி. மு.க.,வுக்கும் பா.ஜ., தான் ஓனர். பா.ஜ., அமைச்சர் ஒருவர், என்னை நடிகர் என்கிறார். நான் நடிகன் தான். ஆனால், நான் அரசியலில் நடிக்கவில்லை. தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டாலும் சுற்றி சுற்றி அது பா.ஜ.,வுக்குதான் போகும். கரூரில் நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்றால், அங்கு 20 ஆண்டாக போட்டி போட்ட உங்கள் அடிமையை ஏன் கோவைக்கு ஓட வைத்தீர்கள்?
மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கும் நாள். மண்டையை பிளக்கும் அந்த சூரியன் எப்படா ஒழியும் என மக்கள், அதை வெறுத்து ஒதுக்குவர். அப்படி தீயசக்தி தி.மு.க.,வை ஓட ஓட விரட்டி, முற்றுப்புள்ளி வைக்கும் மே 4ம் தேதி, நமக்கு ஸ்பெஷலான நாளாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
@block_Y@ அதிக நேரம்
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், மாலை 3:00 மணிக்கு விஜய் பேசுவதாக இருந்தது. வழக்கமாக நிகழ்ச்சிக்கு தாமதமாக வரும் விஜய், நேற்று 'ரோடு ஷோ 'முடிந்து, மதியம் 2:10 மணிக்கே வந்து விட்டார்; ஆனால், அரங்கம் நிரம்பவில்லை. எனவே, ஒரு மணி நேரம் காத்திருந்து, அரங்கம் நிரம்பிய பின், 3:15 மணிக்குதான் விஜய் பேசினார். அதேபோல், கட்சி துவங்கிய பின், விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டை தவிர, 20 நிமிடத்துக்கு மேல் விஜய், எங்குமே பேசியது இல்லை. ஆனால், நேற்று தேர்தல் பிரசாரத்தின் கடைசி கூட்டத்தில், முதல்முறையாக 32 நிமிடங்கள் விஜய் பேசினார்.block_Y
@block_B@ கீழே விழுந்தது அபசகுணமா?
பேசி முடித்த பின், விசிலை ஊதுவதற்காக, அதை விஜய் தனது கையில் எடுத்தார். ஆனால், கை தவறி விசில் கீழே விழுந்தது. தேர்தல் பிரசாரத்தை முடிக்கும் நேரத்தில், தனது சின்னமான விசில் கீழே விழுந்ததை, ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை உள்ள விஜய் ரசிக்கவில்லை. இதை அபசகுனமாகவும் த.வெ.க.,வினர் எண்ணுகின்றனர்.block_B
@block_P@
த.வெ.க., தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கை: நான் அரசியலுக்கு வந்த நாள் முதல் நம் அரசியல் எதிரியான தீயசக்தி தி.மு.க.,வும், கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் காணும் பிளவுவாத சக்தி பா.ஜ.,வும், சொல்ல முடியாத நெருக்கடிகளையும், நிர்பந்தங்களையும், வேதனைகளையும் கொடுக்கிறது. ஊழல் விஷ சக்திகளால் த.வெ.க.,வை வீழ்த்த முடியாது.
பணத்தை மட்டுமே நம்பி சுயலாபங்களுக்காக அரசியல் செய்யும் அடிமை அரசியல் சூதாடிகளின் எந்த சின்னத்திற்கு நீங்கள் ஓட்டு போட்டாலும், பிளவுவாத சக்திகளுக்கான ஆதரவாகவே அது மாறும். எனவே, எப்போதும் போல இந்த அரசியல் சூதாடிகள் பண மழை பொழிந்தாலும், விசிலுக்கு ஓட்டு போட்டு புரட்சி செய்யுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.block_P
அப்படி யார் யார் பதவியை பிடிக்க காலில் விழுந்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும்?
விஜய் அடுத்த படத்தில் நடிக்க போய் விடுவாரோ? அதான் ஜனநாயகன் ஊத்திடுச்சில்லொ! தொண்டர்கள்/கட்சிக்காரர்கள் நிலைமை அம்போ?
தாங்கள் யார் பாதத்தில் தண்டணிடுவீர்களோ.
DMK come come write a comment against TVK…
இந்த வெறித்தனமான ஆதரவாளர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்: நீங்கள் மாறாத வரை அல்லது சரியாகச் சிந்திக்காத வரை எதுவும் மாறாது.
இந்த நடிகரும் அரசியல்வாதியுமானவர் 10/12 ஆம் வகுப்பை முடித்தாரா இல்லையா என்பதும், அவர்களின் இரண்டாம் நிலை/மாவட்ட அளவிலான தலைவர்களில் பெரும்பாலோர் தங்கள் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்களா இல்லையா
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய எவருக்கும் இந்தத் தேர்தல் கடைசித் தேர்தலாக இருக்க வேண்டும். இனி அரசியலில் ஈடுபடவோ அல்லது இந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கனவு காணவோ கூடாது என்பதற்கு இது அவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்
இவர் எட்கேனவே காலில் விழுந்துவிட்டார், தேர்தலில்பின் இருக்கு சிபிஐ யின் ஆப்பு.
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இவர் யார் காலடியில் போய் விழுந்து கிடக்கப் போகிறார்?
வேறு எங்கே..... அவரின் உண்மையான முதலாளி.... திமுக கட்சியிடம் போய் அடைக்கலம் ஆவார்..... திமுக சொல்லி ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் த.வெ. க ....அவர்களின் ஒரே நோக்கம்.... திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்க வேண்டும்..... அது தான் இவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் அஜெண்டா.... TVK கட்சிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும்.... திமுக கட்சிக்கு போடுவதற்க்கு சமம் !!!
நீங்க சொன்னாதில் இது நூற்றில் ஒன்று. டீ மூ கா வுக்கு எப்போதும் vadakans தயவு இல்லாமல் ஒன்றும் நடக்காது. உதாரணம் கேசரி வால், தேஜஸ் வி போன்ற வர்களின் தயவு.மேலும்
-
போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த வாய் திறக்காத விஜய்: பதறும் பெற்றோரின் பரிதவிக்கும் கேள்வி!!
-
தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்
-
ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி; ஓசூர் அருகே கோர விபத்து
-
திருவண்ணாமலையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி