தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா

28

திருப்புத்துார்: ''தி.மு.க., ஆட்சி அடித்து விரப்பட்ட வேண்டிய தீய ஆட்சி,'' என, திருப்புத்துாரில் பா.ஜ., தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா சாடினார்.

கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசாரத்தில் எச்.ராஜா பேசியதாவது: பா.ஜ., அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நாட்டு நலனுக்காக ஒன்று சேர்ந்தவை. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ஏற்கனவே தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,''10 ரூபாய் பாலாஜி, இவரை போல கேவலமாக யார் உள்ளார்கள்,'' என்றார்.

தற்போது அமைச்சரவையில் அவர் அமைச்சராக இருந்தார். அதே மாதிரி சட்டசபையில் காளிமுத்து சபாநாயகராக இருந்த போது அமைச்சர் சேகர்பாபு தன் இருப்பை காட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தை கெட்ட வார்த்தையால் பேசினார். நாம் அப்படி பேச மாட்டோம். கருணாநிதி குடும்பத்தை கேவலமாக பேசியவர். அவர் இன்று தி.மு.க.,அமைச்சரவையில் உள்ளார். இப்படி தி.மு.க.,வில் உள்ள ஒவ்வொருவரும் அவ்வளவு மோசமானவர்கள்.

வாக்காளர்களிடம் 'பணம் கொடுத்தால் வாங்குங்கள்' என்கிறார்கள் சிலர். அது தவறு. தேர்தலில் காசுக்கு ஓட்டை விற்காமல், நாளை வாக்காளர்கள் நேர்மையை நிரூபிக்க வேண்டும். கூட்டணிக்கட்சிக்கு பா.ஜ., சொன்னால் சொன்னது தான்.

நமக்கு 88 சீட் இருந்தாலும் 44 சீட் கூட இல்லாத கட்சிக்கு முதல்வர் பதவி கொடுத்தது. நட்புக்கு முழு இடம் கொடுத்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் திருமாறனை பா.ஜ., வேட்பாளராகவே நிறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement