பிங்க் ஓட்டுச்சாவடிகளில் ஆர்வமுடன் ஓட்டளிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பிங்க் ஓட்டுச்சாவடிகளில் பெண்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.

பெண்களுக்கான அதிகாரமளித்தல் விழிப்புணர்வுக்காக பிங்க் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தலைமை அலுவலர் முதல் பாதுகாப்புப் பணியாளர் வரை பெண்களாகவே நியமிக்கப்பட்டிருந்தனர். ராஜபாளையம் எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்துார் இந்து உயர்நிலைப்பள்ளி, சாத்துார் நகராட்சி துவக்கப்பள்ளி, சிவகாசி எஸ்.சி.எம்.எஸ்., பெண்கள் உயர்நிலைப்பள்ளி, விருதுநகர் ஷத்திரிய பெண்கள் நடுநிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சுழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பிங்க் ஓட்டுச்சாவடிகளில் பெண் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Advertisement