75,064 ஓட்டுச்சாவடிகளும் 'சிசிடிவி' வாயிலாக கண்காணிப்பு
சென்னை: மாநிலம் முழுதும் உள்ள ஓட்டுச்சாவடிகள், 'சிசிடிவி கேமரா' வாயிலாக, தலைமை செயலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேரடி கண் காணிப்பில், 18 மாவட்ட வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட குழுவினருடன், இது செயல்பட்டு வருகிறது.
மாநிலம் முழுதும் 75,064 ஓட்டுச்சாவடிகளும், அந்த மையத்துடன் இணைக்கப்பட்டு, நேரடியாக கண்காணிக்கப்பட்டன. ஓட்டுச்சாவடிக்கு உள்ளே ஒன்று மற்றும் ஓட்டுச்சாவடிக்கு வெளியே ஒன்று என, மொத்தம் 1.50 லட்சம் 'சிசிடிவி கேமரா'க்கள் அங்கு பொருத்தப் பட்டிருந்தன.
இவற்றின் வாயிலாக, மாநிலம் முழுதும் உள்ள ஓட்டுச்சாவடிகள் நேற்று, தலைமை செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டன.
இதேபோல, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள, 62 மையங்களும் நேற்று இரவு முதல் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும்
-
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; மேல்முறையீடு செய்ய அவகாசம்
-
ஓட்டுப்பதிவு அதிகரிப்பு ஏன்?: மக்களின் ஆர்வமா? எஸ்.ஐ.ஆர் காரணமா?
-
மேற்கு வங்கத்தின் நல்லாட்சியின் புதிய சகாப்தம்; ஓட்டுப்பதிவு சாதனை குறித்து அமித்ஷா பெருமிதம்
-
சத்ய சாய்பாபா ஆராதனை மகோற்சவம்; புட்டபர்த்தியில் குவிந்த பக்தர்கள்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 5 நாட்களில் ரூ.2080 குறைவு
-
கோல்கட்டாவில் பிரதமர் மோடி: படகில் பயணம் செய்து மகிழ்ச்சி