ஓட்டுப்பதிவு அதிகரிப்பு ஏன்?: மக்களின் ஆர்வமா? எஸ்.ஐ.ஆர் காரணமா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கு மக்களின் ஆர்வம் காரணமா அல்லது எஸ்.ஐ.ஆர் பணிகள் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் நேற்று (ஏப்.,23) 234 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது. இதில், இதுவரை இல்லாத அளவாக முதன்முறையாக எண்பது சதவீதத்தை தாண்டி, 85.03 சதவீத ஓட்டுகள் பதிவாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது திமுக அரசின் செயல்பாடுகள் தொடர, மக்கள் விரும்பியே ஓட்டளித்ததாக திமுக.,வினரும், ஆளும்கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டதால் ஆட்சி மாற்றத்தை விரும்பி மக்கள் ஓட்டளித்ததாக அதிமுக.,வினரும், புதிய கட்சிக்கு வாய்ப்பளிக்கும் விதமாக விஜய் அலை வீசியதால் தான் அதிகளவு சதவீதம் கூடியுள்ளதாக த.வெ.க.,வினரும் என ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்லி வருகின்றனர்.
உண்மையில் மக்களின் ஆர்வம் தான் ஓட்டு சதவீத அதிகரிப்புக்கு காரணமா அல்லது எஸ்.ஐ.ஆர் திருத்தம் காரணமா என ஆராயப்படுகிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், மொத்தம் இருந்த, 6.29 கோடி வாக்காளர்களில், 4.63 கோடி பேர், அதாவது 73.63 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர்.
இறந்தவர்கள், போலி முகவரி, ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகள், ஊர் மாறியவர்கள், மாநிலம் விட்டு சென்றவர்கள் என அனைத்தும் நீக்கப்பட்டன. இப்பணிகளுக்கு பின், மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில், 18 வயதான புதிய வாக்காளர்கள் மட்டும் 14,59,039 பேர். இந்த எண்ணிக்கை அடிப்படையில் நேற்று நடந்த தேர்தலில், சராசரியாக 85.03 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. அதாவது, மொத்தமுள்ள 5.73 கோடி வாக்காளர்களில், 4.85 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர். அதாவது கடந்த தேர்தலை விட, கூடுதலாக 22 லட்சம் பேர் ஓட்டுப் போட்டுள்ளனர்.
புள்ளிவிவரம் சொல்வது என்ன
2001 முதல் தமிழகத்தில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் ஓட்டு சதவீதம் ஏற்ற, இறக்கமாக இருந்தாலும், பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றன. அதாவது, 2001ல் 2.80 கோடி ஓட்டுகள் பதிவாகி இருந்தன.
2006ல் 3.29 கோடி (49 லட்சம் அதிகம்), 2011ல் 3.69 கோடி (40 லட்சம் அதிகம்), 2016ல் 4.32 கோடி (63 லட்சம் அதிகம்), 2021ல் 4.63 கோடி (31 லட்சம் அதிகம்), 2026ல் 4.85 கோடி (22 லட்சம் அதிகம்) வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர்.
அதாவது ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்தது 30 முதல் 40 லட்சம் ஓட்டுகள் அதிகரித்து வந்த நிலையில், இந்த தேர்தலில் வெறும் 22 லட்சம் வாக்காளர்களே அதிகம் ஓட்டளித்துள்ளனர். அதிலும், முதல் தலைமுறை வாக்காளர்களே 14.59 லட்சம் பேர்.
இந்த புள்ளிவிவரங்களின் படி பார்த்தால், எஸ்.ஐ.ஆர் பணி காரணமாக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்ததே சதவீதம் அதிகமாக காரணம். அதே நேரம், மற்ற தேர்தல்களை ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் அதிகரிக்கும் ஓட்டுகளின் எண்ணிக்கை சற்றே குறைவு என்றே சொல்லலாம்.
கடந்த 5 ஆண்டுகால திமுகவின் மிக மோசமான ஆட்சி தமிழகத்தில் மீண்டும் தொடர விடக்கூடாது என்பதற்காகவே கடந்த தேர்தல்களிலெல்லாம் வாக்களிக்காதவர்கள் இந்த முறை வாக்களித்துள்ளார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
தாமே ஆசைப்பட்டு காசு வாங்கி அல்லது மிரட்டலுக்கு பயந்து காசு வாங்கிய பின் வாக்குச்சாவடிக்குப் போகாமல் தப்பிக்கவே முடியாது. ஆனாலும் இறைவனின் திருவிளையாடல் எப்படியோ?
24 லட்சம் அதிகம் பதிவானது மக்கள் தொகை பெருக்கத்தால். சதவீதம் கூடியதுக்கு SIR காரணம், அவ்வளவு தான்.
SIR மூலம் குறைந்த ஓட்டுக்கள் 20 லட்சம் அதிகரித்த ஓட்டு கூட்டினால் கிட்டத்தட்ட 1 கோடி ஓட்டுகள் என்று கணக்கிட வேண்டும். நிச்சயம் முடிவுகள் மாறும். பார்ப்போம்.
இந்த தேர்தலில் எந்தவிதமான மாற்றமோ முன்னேற்ளமோ இல்லை. எஸ் ஐ ஆர் காரணமாக ஓட்டு சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதனால் ஆட்சி மாற்றம் , ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் எல்லாம் உண்மை அல்ல. விஜய்க்கு பதினைந்து சதவீதம் வாக்குகள் கிடைக்கும். திமுக கூட்டணி நாற்பது முதல் நாற்பத்தைந்து சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறும். அதிமுக கூட்டணி முப்பது முதல் முப்பத்தைந்து சதவீதம் வாக்குகள் பெறும். சீமான் ஐந்து சதவீதம் பெறுவார். திமுக 160 அதிமுக 70 மற்றவர்கள் 4.இது தான் நடக்கப் போகிறது!
5 வருடங்களுக்கு ஒரு முறை மக்களை சந்தித்து வாக்கு பிச்சை கேட்பவர்களுக்கும், வாக்கு பிச்சை கேட்காதவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பெரும்பாலான பெரிய கட்சிகள் தங்கள் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலை சந்தித்திருந்தால் அவர்களை பாராட்டலாம். மாறாக இவர்கள் பணத்தை நம்பி இருக்கின்றார்கள்.இவர்கள்தான் உண்மையான தற்குறிகள். இது பணம் கொடுத்த கட்சிகள் அனைத்துக்கும் பொருந்தும். சமூக நீதி, மதச்சார்பின்மை எல்லாமே பேச்சுக்குத்தான்.
இரண்டும், அதுபோக மாநில வளச்சியின்மை... ஊழல் பெருச்சாளிகளுக்கு மருந்தாக அமையும் என்ற மக்களின் வேக்கை திரளாகவே பார்க்கமுடிகிறது...
மக்களுக்கு புது வாழ்க்கை புது தத்துவம் பிடித்திருக்கிறது
SIR இல் எடுக்கப்பட்ட 74 லட்சம் ஓட்டுக்களை நீக்கினால் கூட கிட்டத்தட்ட 4% அதிக வோட்டு கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாது மக்கள் வோட்டு போட்டு இருக்கிறார்கள் என்றால் அது மக்களின் ஆர்வத்தையே குறிக்கிறது. அதுவும் இளம் வாக்காளர்கள் பெருமளவில் வந்து வாக்களித்து உள்ளதை எனது தொகுதியில் கவனித்தேன். தேர்தல் கமிஷன் வெளியிடும் எண்களை பார்த்தால் தெரிய வரும்.
வாக்குசதவீதம் அதிகரித்தபோதெல்லாம் ஆட்சி மாறி இருக்கு ....ஆகா இந்தமுறை ஆட்சி மாற்றம் உறுதிமேலும்
-
வெற்றி எப்படி ஜோதிடர்களிடம் தேடி செல்லும் வேட்பாளர்கள் திக்..திக்.. மனநிலையில் தி.மு.க., அ.தி.மு.க.,வினர்
-
தேர்தல் பரபரப்பு முடித்தது களை கட்டும் பந்தையம்
-
ரோட்டில் ஓடும் கழிவுநீர் பொதுச்சுகாதாரம் பாதிப்பு
-
வளைவு பகுதியில் பிளக்ஸ் விபத்து ஏற்படும் அபாயம்
-
சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் 58வது திருஅவதார நாள் வேள்வி
-
திருத்தேரி ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு