திரிணமுல் காங்கிரசின் அராஜக ஆட்சி; மம்தா அரசுக்கு ராகுல் கண்டிப்பு
புதுடில்லி: மேற்குவங்கத்தில் காங்கிரஸ் தொண்டர் தேப்தீப் சாட்டர்ஜி கொலையை ராகுல் கண்டித்ததோடு, மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அராஜக ஆட்சி, குண்டர் ஆட்சி' என விமர்சித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தலுக்குப் பிறகு திரிணமுல் காங்கிரஸுடன் தொடர்புடைய குண்டர்களால் காங்கிரஸ் தொண்டர் தேப்தீப் சாட்டர்ஜி கொலை செய்யப்பட்டது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இன்று மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் நிலவவில்லை, மாறாக திரிணமுல் காங்கிரஸின் குண்டர் ஆட்சியே நிலவுகிறது.
எதிர்ப்புக் குரல்களை அச்சுறுத்துவதும், தாக்குவதும், ஒடுக்குவதும் திரிணமுல் காங்கிரஸின் அடையாளமாகிவிட்டது. காங்கிரஸின் அரசியல் ஒருபோதும் வன்முறையில் வேரூன்றியதில்லை, இனியும் இருக்காது. நாங்களும் எங்கள் தொண்டர்களை இழந்துள்ளோம், ஆனாலும் நாங்கள் எப்போதும் அகிம்சை மற்றும் அரசியலமைப்புவாதப் பாதையையே தேர்ந்தெடுத்துள்ளோம். இதுவே எங்கள் பாரம்பரியம், இதுவே எங்கள் உறுதி.
குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும், கடுமையான தண்டனை வழங்க வேண்டும், மேலும் தேப்தீப்பின் குடும்பத்திற்கு முழுப் பாதுகாப்பும் இழப்பீடும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவின் அகிம்சைப் பாரம்பரியத்தைக் களங்கப்படுத்தும் இந்த அரசியலுக்கு நாங்கள் தலைவணங்க மாட்டோம். நீதி வழங்கப்படும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
Congress Rahul and TMC Mamta are partners in I.N.D.I.Alliance.
Rahul is known for putting goal same side
இதுபோல் த.நா விலும் நடந்தால் ஆச்சரியமில்லை. தீயசக்தி மம்தாவின் கட்சிக்கு சோடைபோகாதது.
பா ஜா காவால் வேறு வழியின்றி இந்த அறிவிப்பு. மாட்டிக்கிட்டா மக்கள் ஒரு வழியா தொரத்திடு வாங்க.
Khangi has been totally rejected in WB and i wonder whats this guy doing there making complaints?
முதன்முறையா தொண்டர்களை மனிதர்களாக மதிக்கும் ஒரு காங்கிரஸ் தலைமை . கார்கே முதல் செல்வப்பெருந்தகை வரை பார்த்ததில் திமிர் தான் தெறிக்கும்மேலும்
-
ஏப்ரல் 30ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
அபுதாபியில் யுஏஇ அதிபரை சந்தித்தார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
-
கொழும்பு வந்த புத்த துறவிகளிடம் ரூ.110 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்
-
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வெள்ளை மாளிகை பெண் அதிகாரி முன்கூட்டியே சொன்னது எப்படி?
-
அழுத்தத்திற்கு பயந்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்; ஈரான் அதிபர் திட்டவட்டம்
-
நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியாகிறது