கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி; ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்

31

நமது நிருபர்




கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார்; முதல்வருடன் மக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், கொடைக்கானலில் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவுடன் சென்றுள்ளார். அவர் கொடைக்கானல் பாம்பர்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.

தி.மு.க., தொண்டர்கள் ஆங்காங்கே உற்சாகமாக வரவேற்றனர்.


இந்நிலையில் இன்று (ஏப்ரல் 26) காலை முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார்; முதல்வருடன் மக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர். வரும் 29ம் தேதி வரை, கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வு எடுக்கிறார்.


அவர் தங்கி உள்ள நட்சத்திர விடுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பும் வரை, கொடைக்கானல் நகர் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement