காயங்களுடன் ஆண் சடலம் காஞ்சிபுரத்தில் சலசலப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ராஜாஜி சந்தை பகுதியில், காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உ ட்பட்ட ராஜாஜி சந்தை பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே, ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, விஷ்ணுகாஞ்சி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், சந்தையில் சுமை துாக்கும் தொழிலாளியான முரளி, 42, என்பது தெரியவந்துள்ளது. உடலில் காயங்கள் இருப்பதால், கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதி யில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement