தில்லு முல்லு நடக்கிறதா என்பதை விழிப்புடன் கண்காணியுங்கள்; கட்சியினருக்கு இபிஎஸ் அறிவுரை
சென்னை: ஓட்டு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லு முல்லு நடக்கிறதா என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள் மற்றும் அயராது தேர்தல் பணியாற்றிய அதிமுகவினருக்கும் நன்றி. ஓட்டு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லு முல்லு நடக்கிறதா என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். வேட்பாளர்கள், ஏஜென்ட்கள் தங்களுக்கான ஓட்டு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணும் பணி முறையாக நடை பெறுகின்றனவா என்பதை விழிப்போடு கண்காணிக்க வேண்டும்.
தமிழக மக்களைக் காப்பதற்காக, தீயசக்தி திமுக மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம்; ஓட்டு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை மிகுந்த விழிப்போடு கண்காணித்து முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு தகவல் கொடுத்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
உலக மக நடிப்பு
உங்கள் கட்சியிலும் ஒரு ராகவ் சத்தா மாதிரி ஒருவர் நிச்சயமாக உருவாக்க படுவர்
Election commission is independent body. But the state good officers are working under Election commission. That is why future CM is cautioning cadres which is routine one and several times Hon.amma cautioned like this in past Elections.
பாஜக மேலே நம்பிக்கையில்லை என்று சொல்கிறீர்களா? கூண்டோடு அதிமுக எம்எல்ஏக்களை பாஜகவில் இணைத்து பாஜக எதிர்கட்சி ஆகிவிடும். லீனா மார்ட்டின் எதிர்கட்சி தலைவர்.
வாழ்த்துக்கள் தமிழக முதல்வரே....
திமுகவினர் ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து புகை போட்டு வாக்கு எண்ணிக்கையை தெரியாத மாதிரி கெடுக்க தெரிந்தவர்கள். 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்
தில்லுமுல்லு கழகம் செய்யவேண்டியதை ஏற்கனவே பக்காவா செஞ்சிருச்சு ..... நீங்க ரொம்பவே அப்பாவி ....
அதிமுக+ பாஜக கூட்டணி திரும்பி வந்து மீண்டும் இரட்டை எஞ்சின் அரசு நல்லாட்சி தர வேண்டும்
ஆமாங்க, கொடைக்கானல், துபாய், லண்டன் போகிற மாதிரி மக்கள் கண்ல மிளகாய்பொடிய தூவிட்டு போவாங்க
2026 இல் அதிமுக அரசு அமையும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர்மேலும்
-
புதுச்சேரி கடற்கரை துாய்மை பணி; சமூக கல்லுாரி மாணவர்கள் ஆர்வம்
-
பா.ஜ., கனவு திட்டங்களை தவிடு பொடியாக்க முதல்வர் ரங்கசாமி புதிய திட்டம்: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
-
வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும் ; துணை ஜனாதிபதி
-
108 பால் குடம் ஊர்வலம்
-
ஓட்டுக்கு வழங்கப்பட்ட பணம்: அ.தி.மு.க., நிர்வாகிகள் 'ஸ்வாகா'
-
தேர்தலையொட்டி நடந்த சோதனை :மது கடத்தியதாக 162 வழக்குகள் பதிவு