பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம்ஆத்மி அரசு? ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்எல்ஏக்கள்!
சண்டிகர்: பாஜவில் இணைந்த அதிருப்தி எம்பி ராகவ் சத்தாவின் கட்டுப்பாட்டில் பஞ்சாப்பின்63 எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எந்நேரமும் அங்கு ஆம்ஆத்மி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆம்ஆத்மி கட்சியின் செயல்பாடுகளின் மீது ஏற்பட்ட விரக்தியால், அக்கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா உள்பட ராஜ்ய சபா எம்பிக்கள் 7 பேர் ஆம்ஆத்மியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். மேலும், ராகவ் சத்தா, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் உள்ளிட்டோர் பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமில்லாமல், ராஜ்ய சபாவில் 10ஆக இருந்த ஆம்ஆத்மி எம்எல்ஏக்களின் பலம் 3ஆக குறைந்துள்ளது. ராகவ் சத்தா பஞ்சாப்பில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். இவர் தற்போது பாஜவில் இணைந்ததால், பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி அரசு ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
117 இடங்களைக் கொண்ட பஞ்சாப்பில் 92 எம்எல்ஏக்களுடன் ஆம்ஆத்மி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது. அவர்களில் 63 பேர் ராகவ் சத்தாவின் ஆதரவாளர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த எம்எல்ஏக்கள் பாஜவுக்கு தாவினால் அங்கு ஆம்ஆத்மி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எந்நேரம் வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம் என்ற சூழல் இருப்பதாக ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றன.
இதனிடையே, ராகவ் சதா கட்சி தாவல் குறித்து பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன்,"சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடமும் பயன்படுத்தப்பட்ட அதே வாஷிங் மெஷின் பஞ்சாபில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாஜவில் இணையும் துரோகிகளான 7 எம்பிக்களும் பஞ்சாப்பை பிரதிபலிக்கமாட்டார்கள்," என்று காட்டமாக கூறியிருந்தார்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து "MP" க்களை இழுத்த பாஜவின் செயலை யாரும் குறை கூற மாட்டார்கள்
சொந்த கட்சிக்கு துரோகம் இழைத்து சுய லாபத்திற்காக பாஜவிடம் சேர்ந்த "MP" க்களை யாரும் குறை கூற மாட்டார்கள்
சீக்கிரத்தில் இதே போன்று தமிழகத்திலும் திரவிடமாடல் அரசுக்கு நடந்ததால் மக்கள் வரவேற்பார்கள்
விளக்குமாற்றின் வேலை குப்பைகளை வெளியே தள்ளுவது மட்டுமே.. ஆனால் ஏஏபி விளக்குமாறு குப்பைகளை பத்திரமாக வைத்துக்கொண்டு நல்லவற்றை வெளியே தள்ளியது.. அந்த தவறு தற்போது சரி செய்யப்படுகிறது.... காங்கிரஸ் செய்யும் கவிழ்ப்பு வேலைகள் அரசியல் என்றால்.பாஜக செய்வதும் அரசியலே.... பாஜக செய்வது சதி என்றால் காங்கிரஸ் செய்தததன் பெயர் என்ன?
எல்லாம் பணம் பதுக்க போடும் நாடகம் இந்திய அரசியல் இந்தளவுக்கு கிழ் தறமாக போவதை கண்டு வருந்துகிறேன்
இந்திய சரித்திரத்தில் இடம் பிடிப்பவர்கள் சாக்கடையில் விளா மாட்டார்கள்
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய பிறகு, ஜலந்தரில் உள்ள ஹர்பஜன் சிங்கின் வீட்டுச் சுவர்களில் ஆங்கிலத்தில் Gaddar (துரோகி) என்று எழுத ஆம் ஆதிமி கட்சியின் தொண்டர்கள் விரும்பினர் ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் Gadar என்று எழுதிவிட்டனர். இதன் பொருள் கலகம் அல்லது எழுச்சி என்பதாகும்.
விவசாய மசோதா எதிர்ப்பில் பல நூறு விவசாயிகள் மரணிக்க காரணம் படித்து, பண்பு இல்லாத கெஜ்ரிவால். அவர்கள் சாபம். இனி கட்சி நிலைக்காது. காங்கிரஸ் பொற்கோயில் மற்றும் இலங்கை தமிழர்கள் படுகொலை. காங்கிரஸ் அழிவின் விளிம்பில். திராவிடம் இந்தி எதிர்ப்பு போராட்டம், மற்றும் பல படுகொலை மூலம் இளம் உயிர்கள் வதை. மரணித்த மனித சக்திக்கு இலக்கு திராவிடம் இயக்கம். அண்ணா திமுக பெயர் மாற்றம் செய்ய வேண்டும். சற்று காலம் பின் அமைதி மார்க்கம். அவர்கள் படுகொலைகள் ஏராளம். அவர்களுக்கு பாதிப்பு உக்கிரமாக இருக்கும்?
AAP party is diabolical...it will not sustain.. better to dismantle..
இதேபோல ஆந்திராவில் NT ராமராவ் அரசை N பாஸ்கர் ராவ் எனும் துரோகியை வைத்து காங்கிரஸ் கவிழ்த்தது. ஆனால் என்டிஆர் தான் இறுதியில் வென்றார். இதில் வேடிக்கை என்னவெனில் அதே பாஸ்கர் ராவின் மகன் இப்போது அதே தெலுகு தேசம் ஆட்சியில் அமைச்சராக உள்ளார். இதுதான் அரசியல்.
இதற்கு மட்டும் காங்கிரஸ் உதாரனமாக தேவை
காங்கிரஸ் நாட்டுக்கு செய்த பல நல்ல விஷயங்கள் உள்ளன அதனை பற்றியும் பேசினால் நல்லது
பேசுங்க முருகு பேச யார் தடுத்தது
காங்கிரஸ் எவ்வளவு நல்லது செய்துள்ளது? கருணாநிதி பேச்சைக் கேட்டு முதன் முறையாக ஆட்சி அமைத்த எம்.ஜி.ஆர் ஆட்சியை கவிழ்த்தார் காங்கிரசின் இந்திரா.எம்.ஜி.ஆர் மீண்டும் ஆட்சி அமைத்து இந்திராவுக்கும், கருணாநிதிக்கும் பதிலடி கொடுத்தார். முருகன் கூற்றுப் படி.அரசியலில் இது போல பல நன்மைகளை செய்துள்ளது காங்கிரஸ்.