மங்களூரில் மே 1ம் தேதி முதல் ரேஷன் முறையில் தண்ணீர்

மங்களூரு: “அனைத்து பகுதிகளுக்கும் சமமான தண்ணீர் வினியோகத்தை உறுதி செய்யும் வகையில், மே, 1 முதல் ரேஷன் முறை அமல்படுத்தப்படும்,” என, மங்களூரு கலெக்டரும், மாநகராட்சியின் நிர்வாகியுமான தர்ஷன் எச்.வி. தெரிவித்தார்.

மங்களூரின் சூரத்கல், கிருஷ்ணபுரா, காட்டிபள்ளா, தம்பேல் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, அன்றாட பயன்பாட்டுக்கே தண்ணீர் கிடைக்காத சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.

இதை தவிர்க்க மங்களூரு சுற்றுப்புற பகுதிகளில் ரேஷன் முறையில் தண்ணீர் வினியோகிக்கப்படும் என, கலெக்டர் தர் ஷன் எச்.வி. தெரிவித்தார்.

தும்பே தடுப்பணையில் தற்போதைய நிலவரப்படி, 14.76 அடி உயரத்திற்குள், ஏ.எம்.ஆர்., அணையில் 60.69 அடி உயரத்திற்குள் தண்ணீர் இருப்பு உள்ளது. இதற்கடையில், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் நேத்ராவதி ஆற்றில் சிறிதளவு நீர்வரத்து உள்ளது.

இப்போதைய சூழ்நிலையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தற்போது அணைகளில் உள்ள நீர் இருப்பைக் கொண்டு ஜூன், 10ம் தேதி வரை மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியுமென மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்தது.

Advertisement