கழிவுகளால் சீரழியும் தேர்வழி கிராம ஏரிகள் சீரமைத்து பாதுகாக்க மக்கள் கோரிக்கை
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட பிரித்வி நகர் பின்புறம், 7.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த ஏரிக்குள், பிரித்வி நகர், நேதாஜி நகர் பகுதிகளின் கழிவுகள் குவிக்கப்படுகின்றன. மேலும், இந்த ஏரியில் கழிவுநீர் கலந்து வருகிறது.
அதேபோல், தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில், கோட்டக்கரை பின்புறம், 5.67 ஏக்கர் பரப்பளவு உள்ள தாமரை ஏரி உள்ளது. ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த ஏரிக்குள், கோட்டக்கரை பகுதியின் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது.
இதனால், தாமரை ஏரி முழுதும் கழிவுநீர் சூழ்ந்து, ஆகாய தாமரை படர்ந்துள்ளது. கும்மிடிப்பூண்டி நகரை ஒட்டியுள்ள இரு ஏரிகளும் மாசடைந்துள்ள நிலையில், நகர் மற்றும் தேர்வழி கிராமத்தின் நிலத்தடி நீரின் தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தேர்வழி கிராமத்தின் நிலத்தடி நீரை பாதுகாக்க, இரு ஏரிகளையும் பாதுகாக்க வேண்டும் என, பலமுறை கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகத்திடம் கிராம மக்கள் முறையிட்டனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, உடனே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இரு ஏரிகளையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி: முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
பாரம்பரிய நடனமான கரகாட்டத்தைஎவ்விதத்திலும் சிதைக்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
'டிஜிட்டல் கைது' மோசடியை தடுக்க மத்திய அரசு அதிரடி: ஜனவரி முதல் 9,400 'வாட்ஸாப்' கணக்குகள் முடக்கம் 'சிம் கார்டு'களுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள்
-
பாம்பன் பாலம் ஓரத்தில் முள்மரங்கள்
-
தேர்தல் பணி ஊதியம்வழங்க கோரிக்கை
-
உற்சாகமாக குளித்த கோயில் யானை