கொழும்பு வந்த புத்த துறவிகளிடம் ரூ.110 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்
கொழும்பு: தாய்லாந்திலிருந்து கொழும்பு வந்த புத்த துறவிகள் 22 பேரிடம் இருந்து ரூ.110 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு (ஏப்ரல் 25) போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு வந்த தகவலின் பேரில், தாய்லாந்தில் இருந்து இலங்கையின் கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த புத்த துறவிகள் 22 பேரின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. அதில், ரூ.110 கோடி மதிப்பிலான 110 கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புத்த துறவிகள் கொண்டு வந்த பள்ளி உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளின் ரகசிய அறைகளில் இந்தப் போதைப்பொருட்கள் மறைத்து கடத்தி வரப்பட்டுள்ளது. ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 5 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஸ்பான்சர் ஒருவர் அளித்த டிக்கெட்டின் மூலம் இவர்கள் தாய்லாந்தின் பாங்காங் சென்ற தெரிய வந்தது. மேலும், புத்த துறவிகளின் செல்போன்களை ஆய்வு செய்த போது, வெளிநாடுகளில் இவர்கள் வழக்கமான உடை அணிந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் இருந்துள்ளன. இதையடுத்து, புத்த துறவிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
புத்த துறவிகளா அல்லது மார்க்க ஆட்கள் அப்படி வந்தார்களா >>
இவர்கள் இலங்கையின் அம்பாறை, ஹொரண, பொரலஸ்கமுவ, வத்துக்க, வரகாபொல, பிலியந்தலை, ஹோமாகம, அத்துராலிய, அம்பலாங்கொட, குடிஸ்பத்து, மடப்பத்தை மற்றும் பலங்கொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று மட்டும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இளம் துறவிகள் என்றும், வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயின்று வருபவர்கள் என்றும் கூறப்படுகிறது.
புத்தம் சரணம் கஞ்சாமி.
இலங்கையிலும் ஒரு அயலக அணியா?. அவர்களும் திராவிடர்களே.
70களில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மு அமைச்சர் அமேரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்புகையில் அமெரிக்க சுதந்திர தேவி சிலையில் வைரம் கடத்திவந்து சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டு காமராஜர் தலையிட்டு அவரது செல்வாக்கால் காப்பாற்றப்பட்டதாக ஒரு நிகழ்வு உண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
காமராஜர் தலைஇட்டார் என்றால் அது அவருக்கு பெருமையா ?
இதுக்கும் மேல காமராஜரை மட்டம் தட்ட முடியாது. நேர்மையற்ற செயல்பாடுகள் எதிலும் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை.
இது புத்தம் புதிய உலக உருட்டு...
மஞ்ச துண்டா?
மன்னிக்கவும். எனது கருத்து தெளிவாக புரிந்துகொள்ளும் அளவு நான் பதிவிடவில்லை. விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரை வைரக்கற்கள் விஷயத்துக்காக உக்கார வைத்த செய்தி பரவியவுடன், இது தமிழ்நாட்டின் பெயரையே கெடுத்துவிடும் என்பதால் காமராஜர் டெல்லிக்கு தொடர்பு கொண்டு அமைச்சரை விடுவித்ததாக செய்தி வெளியானது. காமராஜர் தீய செயலுக்கு துணை போகிறவர் அல்ல.
உலகம் முழுவதும் போதை மருந்து வியாபாரம் ஒரு சமூகத்தை சார்ந்து இருக்கிறது. அந்த தொழிலில் மொத்த விரிப்பனையாளர்கள் அவர்கள்தான். அதோடு தொடர்புடையது ஹவாலா, அதுவும் அவர்கள் கையில் தான் இருக்கிறது. இதனால் தான் பல அரசியல்வாதிகள் அவர்களோடு தொடர்பில் இருக்கிறார்கள்.
மிக சரியாக சொன்னீங்க....
இவர்களுக்கு ஜாமீன் பெற்றுத் தர தரமான வழக்கறிஞர்களை ஸ்பான்சர் தேடிக் கொண்டிருக்கிறார்....
அதெலாம் நடக்காது. வழமைபோல நம்ம இந்தியாபோல, இலங்கை புத்தமதத்தை மூர்க்கர்கள் கேவலப்படுத்திவிட்டார்கள் என்று, இலங்கை புத்த பிக்குகள் நாளைக்கு ஊர்வலம் வந்து, அவர்களை விடுவி, இல்லை ஆட்சியை கலைபோம் என்று புலம்புவார்கள்.
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்.. நீ காணும் தோற்றம்..உண்மை இல்லாதது
காவலரேவேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில் கண்முன்னே தோணுவது சாத்தியமே..
புத்த சரணம் என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே ருத்ராச்ச பூனைகளாய் வாழுறீங்க...
துறவிகளின் போர்வையிலே சாமான்ய மக்களையே ஏமாற்றி கொண்டாட்டம் போடுறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை.
அருமை எம் ஜி ஆர் பாடல் வரிகள் மேற்கோள் அற்புதம்
நிஜம் நிஜம் நிஜம்
1. துறவி என்றச் சொல்லுக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பது நம் சைவ சமயம். அவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள். துறவியென்றாலே நம் ஞாபகத்திற்கு வருபவர் சிவனடியாரான பட்டினத்து அடிகளார். "துறந்தார் பெருமை துணைக் கூறின் வையத்துள் இறந்தாரை எண்ணிக் கொண்டற்று" என்று குறள் போற்றுகின்றது. 2. இந்த புத்தமத துறவிகளால் அவர்களின் தலையீடு காரணத்தால் அன்று தமிழீழத்தில் தங்களின் உரிமைக்காக போராடிய தமிழீழ போராட்டம் மேலும் மோசமாகியது. உண்மையான துறவிகள் இதில் தலையிட்டு இருக்கக் கூடாது. அதுதான் மரியாதை