ஆஸ்திரேலிய ஆந்தை மீட்பு
மானாமதுரை:மானாமதுரையில் காயம்பட்டு கிடந்த அரிய வகை ஆஸ்திரேலியா ஆந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டு காட்டிற்குள் விடுவித்தனர்.
மானாமதுரை அரசு மருத்துவமனை அருகே சங்கு விநாயகர் கோயில் வளாகத்தில் நேற்று காலை அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தை ஒன்று காயம்பட்டு பறக்க முடியாமல் கிடந்தது. இதையடுத்து அங்கிருந்த காகம் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் அதனை விரட்டி,விரட்டி கொத்திக் கொண்டிருந்தது. இதை கண்டவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் ஆந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜப்பான் 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம்
-
சூடான் விமான விபத்தில் 14 பேர் பலி
-
சீனா மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பாக்., உடன் கையெழுத்து
-
சோமாலியா சிமென்ட் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் கடத்தல்
-
ஈரான் அமைச்சர் தொடர் பயணம்
-
3 நாளில் எண்ணெய் குழாய்கள் வெடிக்கும் புதிய கெடுவுடன் ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Advertisement
Advertisement