சூடான் விமான விபத்தில் 14 பேர் பலி
கார்டூம்: சூடான் நாட்டின் ஜூபா நகர் அருகே நடந்த விமான விபத்தில், 14 பேர் உயிரிழந்தனர்.
வட ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானின் தலைநகரான ஜூபாவின் புறநகர் பகுதியில் இருந்து நேற்று ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
தீவிர தேடுதலுக்கு பிறகு ஜூபாவிலிருந்து 20 கி.மீ., துாரத்தில் உள்ள மலைப்பகுதியில் விமானம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 13 பயணியர் மற்றும் ஒரு பைலட் என மொத்தம் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதில் கென்யா நாட்டைச் சேர்ந்த இருவரும் அடங்குவர். விமானம் விபத்துக்குள்ளானதற்கு மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement