ஸ்கூட்டர் மாயம்

திருவள்ளூர்: வீரராகவ பெருமாள் கோவில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினோத் கண்ணா, 43; வீரராகவ பெருமாள் கோவில் எதிரே ஸ்டுடியோ வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் மதியம் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரை ஸ்டுடியோ முன் நிறுத்தினார். சிறிது நேரத்திற்கு பின் பார்த்தபோது, ஸ்கூட்டர் மாயமானது தெரியவந்தது.

பல்வேறு இடங்களில் தேடியும் ஸ்கூட்டர் கிடைக்காததால், வினோத் கண்ணா அளித்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement