விழிப்புணர்வு கூட்டம்

வேடசந்துார்:அமைதி அறக்கட்டளை சார்பில் கூவக்காபட்டி ஊராட்சி வெரியம்பட்டியில் பாலின பாகுபாடு தடுத்தல், கண்காணிப்புக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார். திட்ட மேலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சசிகலா வரவேற்றார்.

ஆண்கள் பெண்கள் இடையே பாலின பாகுபாடு, குடும்ப வன்முறை தவிர்த்தல் குறித்து விளக்கப்பட்டது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

சமூக நலன், பயிற்சி அலுவலர் பவித்ரா, தன்னார்வலர் முத்துலட்சுமி பங்கேற்றனர்.

Advertisement