'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு குறித்து த.வெ.க., தலைவர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தில் உண்மையான காரணத்தை விட்டு பட்டியலின மக்களை பிற சமூகத்தினர் துன்புறுத்துவதாக காட்சிப்படுத்தியுள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிகள் பட்டியலினத்தைச் சார்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த கிராமங்களில் குறைவான எண்ணிக்கையில் பட்டியலின மக்கள் வசித்து வந்ததால், உள்ளாட்சி தேர்தல் நடக்கும் போது பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதும், வாபஸ் பெறுவதும், வெற்றி பெற்றபின் வாபஸ் செய்வதும் என பல ஆண்டுகளாக தொடர்ந்தது.
பின்னர் கருணாநிதி முதல்வராக இருந்த போது அரசு முயற்சி மேற்கொண்டு, கடந்த 3 முறைகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சித்தலைவர்களாக வெற்றி பெற்று பதவியில் இருந்து வருகின்றனர். த.வெ.க., தலைவர் விஜய் சமீபத்தில் நடித்து திரைக்கு வராமலே சமூக வலைதளங்களில் வெளியான ஜனநாயகன் படத்தில் பாப்பாபட்டியை மையமாக வைத்து நடந்த தேர்தல் புறக்கணிப்பு குறித்து காட்சிப்படுத்தியுள்ளனர்.
இதில் தேர்தல் புறக்கணிப்பிற்கான உண்மையான காரணத்தை விட்டு, பட்டியலின மக்களை பிற சமூகத்தினர் துன்புறுத்துவதாக காட்சிப்படுத்தியுள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று பாப்பாபட்டியில் கறுப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாப்பாபட்டி கிராமத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும். படத்தின் கதாநாயகனான விஜய், இயக்குநர் வினோத் மன்னிப்பு கேட்க வேண்டும், அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பாப்பாபட்டி ஊராட்சித்தலைவராக இருந்த முருகானந்தம் கூறியதாவது: 10 ஆண்டுகளாக பாப்பாபட்டி ஊராட்சி தலைவராக உள்ளேன். ஜனநாயகன் படத்தில் வன்முறையை துாண்டும் விதமாக, 'ஓட்டு போட்டால் கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன்' என்பது போன்ற காட்சிகள் உள்ளன. முன்பு தனி தொகுதியாக ஒதுக்கியபோது பட்டியலின மக்கள் சதவீதப்படி குறைவாக இருக்கிறார்கள் என்பதை முன்வைத்தே போராட்டங்கள் நடந்தன.
சில காலங்களுக்கு பின்னால் அதனை அரசியலாக மாற்றி, தவறானதாக இரண்டு மூன்று முறை தேர்தல் நடக்கவிடாமல் செய்தனர். அடுத்து நடந்த தேர்தல்களில் என் அண்ணன் பெரியகருப்பன் 5 ஆண்டுகள், அடுத்து வந்த 10 ஆண்டுகளாக நான் ஊராட்சித்தலைவராக இருந்தேன். படத்தில் வரும் காட்சிகளுக்கும் இந்த ஊர் மக்களின் பழக்கவழக்கங்களுக்கும் சம்பந்தமே இல்லை. தவறாக சித்தரித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என்றார்.
வாசகர் கருத்து (22)
YESPEE - mumbai,இந்தியா
28 ஏப்,2026 - 16:42 Report Abuse
மோடிக்கு விதிவிலக்கு 0
0
Reply
ஆரூர் ரங் - ,
28 ஏப்,2026 - 15:11 Report Abuse
தீண்டாமையை அமல்படுத்துவது மிகப்பெரும்பாலும் ஆதிக்க இடைநிலை சாதியினர். பட்டியலின ரிசர்வ் தொகுதிகளில் மறைமுகமாக அவர்கள்தான் அதிகாரம் செய்து வருகின்றனர். அங்கெல்லாம் பட்டியலின மக்கள் அன்றாடக் கூலிகளாக இருப்பதால் உண்மையான அதிகாரமில்லை. பெரியார் போராட்டம் நடத்தியது இதே இடைநிலை சாதியினர் அதிகாரத்துக்குதான்? இரு திராவிட கழகங்களும் அதே வழியில்தான் செல்கின்றனர். SC அல்லது ST முதல்வராவது கானல் நீர். 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
28 ஏப்,2026 - 12:48 Report Abuse
சமூகங்களைப் பற்றிய அடிப்படை அறிவு, புரிதல் என்ற எதுவுமே இல்லாமல், போதை வியாபர காசில் படம் எடுக்கும் திராவிடியான்கள், சமூக சீர்திருத்தம் பற்றி படம் எடுப்பது அருவருப்பான ஒன்று.. 0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
28 ஏப்,2026 - 12:32 Report Abuse
இந்த படம் தடை செய்யப்பட வேண்டும் 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
28 ஏப்,2026 - 11:36 Report Abuse
சாதி பிரச்சனைகளை தூண்டி குளிர் காய்வது அரசியல் வாதி மற்றும் சினிமாகாரனின் வேலை. வருமானத்திற்கு வருமானம், வோட்டுக்கு வோட்டு. அண்மை காலத்தில் இதற்கு பின்னால் சில மதம் சார்ந்த சக்திகள் இருந்து இந்த சமூக பிரச்சனைகளை தூண்டி விடுகின்றன. இது தான் 40 வருடங்களுக்கு முன்னால் கன்யாகுமரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
28 ஏப்,2026 - 11:24 Report Abuse
நடிகர் விஜய்க்கு சொல்லும் தகுதி படைத்த ஜான் ஆரோக்கியசாமியோ , ஆதவ் அர்ஜுனனோ , உலகில் மதத்தை வைத்து அரசியல் செய்த இடமெல்லாம் பாழாகி போனதை நினைவு கூறுவார்களா 0
0
Reply
Arul Narayanan - Hyderabad,இந்தியா
28 ஏப்,2026 - 11:16 Report Abuse
பஞ்சாயத்து ராஜ் சட்டப் படி முதல் முறையாக 1996ல் கருணாநிதி அரசால் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது முதல் அடுத்த பத்தாண்டுகளில் 3 ஊராட்சிகளிலும் தேர்தலே நடைபெறவில்லை. 2006ல் மீண்டும் பதவியேற்ற திமுக அரசு ஒவ்வொரு ஒன்றியத்திலும் சுழற்சி முறையில் தாழ்த்தப்பட்டோருக்கு ஊராட்சிகளை ஒதுக்கிய தால் தான் அங்கே தேர்தல் நடந்தது. எனவே அங்கு தாழ்த்தப்பட்டோரே தொடர்ந்து தலைவராக இருக்க வாய்ப்பில்லை. 0
0
Reply
Anand - chennai,இந்தியா
28 ஏப்,2026 - 10:50 Report Abuse
கூறுகெட்டவனெல்லாம் படம் எடுத்தால் இப்படித்தான் இருக்கும். பொண்டாட்டி பிள்ளைகளை அம்போ என தவிக்கவிட்டு, அடுத்தவளோடு ஜோடி போட்டு ஊர் சுற்றி திரியும் தறுதலை இவனெல்லாம் நாட்டை காப்பாத்தப்போறானாம். 0
0
Venkatesan Ramasamay - ,இந்தியா
28 ஏப்,2026 - 14:36Report Abuse
முற்றிலும் துறந்தவருக்குத்தான் முன்னேற்றப்பாதை நல்லா தெரியும் ...
நாடாள தகுதியானவர் .. 0
0
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
28 ஏப்,2026 - 17:35Report Abuse
அறிவாளி வெங்கடேசன் ராமசாமி.... முற்றும் துறந்தவன் யாரு...? முற்றும் துறந்தவன்னா... ஐம்புலன்களையும் அடக்கி வனத்திற்குள் தன்னந்தனியே தவமிருக்கும் சித்தன்... இவரு, 15 வயசுலேயே பிஞ்சுலேயே பழுத்து வெம்பி போனது... அதுமட்டுமா... உலகத்தில் ஒரு மனிதனுக்கு எத்தனை கெட்டபழக்கங்கள் கூடாதோ அத்தனையும் தனிடத்தே கொண்ட “முற்றும் துறந்தவன்”.... 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
28 ஏப்,2026 - 10:48 Report Abuse
திமுகாவின் சித்து விளையாட்டுகள் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டன. 0
0
Reply
Saran - pondichery,இந்தியா
28 ஏப்,2026 - 10:46 Report Abuse
You didn’t see the film but you are proing by hearing the situation. What kind of people are you ????? Think before doing some thing These old corrupted politicians are exploiting you by giving 200 Rs or 500 Rs. 0
0
Reply
மேலும் 10 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement