கிளப் அணிகள் கால்பந்து போட்டி

திண்டுக்கல்:மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் கிளப் அணிகளுக்கு இடையே கால்பந்து லீக் போட்டிகள் திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளி மைதானத்தில் நடக்கிறது.

நேற்று வரை நடந்த போட்டிகளில் ஏ.பி.சி.,அணி ஆர்.என்.எல்., அணியை 3:0, புனித மரியன்னை எப்.சி.,அணி லைன் தெரு அணியை 3:1, சன் ஸ்போர்ட்ஸ் அணி பார்வதீஸ் அணியை 6:0, சீட்ஸ் எப்.சி.,அணி, பி.பி.எம். எப்.சி., அணியை 5:0, எஸ்.எஸ்.எம்., அணி, எம்.எம்.எம்., அணியை 1:0 என்ற கோல்கணக்கில் வென்றன.

இதுபோல் பீலே ஸ்போர்ட்ஸ் அணி ஜி.எஸ்.,அணியை 4:0, பட்டுமணி அணி கார்நேசன் எப்.சி.,அணியை 1:0, புனித மரியன்னை அணி சன் ஸ்போர்ட்ஸ் அணியை 1:0, ரமேஷ் முருகன் எம்.எப்.சி., அணி எம்.எம்.எம். எப்.சி., அணியை 2:1 கோல் கணக்கில் வென்றன.

Advertisement