கவர்னர் மாளிகையில் மீண்டும் ஸ்டாலின் குரல் ஒலிக்கும்: அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை

8

பழனி: பழனி முருகன் கோவிலில் நேற்று அமைச் சர் சேகர்பாபு தன் குடும்பத்தினருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். தேர்தல் விதிமுறைகளால், அவரது வாகனம் கிரி வீதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. பேட்டரி கார் வாயிலாக, ரோப் கார் ஸ்டேஷன் சென்றார். பின், ரோப் காரில், மலை மீது கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்தார்.

இதையடுத்து, மலை அடிவாரம் வந்த சேகர்பாபு, கிரி வீதியில் உள்ள மஹிசாசுரமர்த்தினி, வீரதுர்கை அம்மன், வனதுர்கை அம்மன், அழகுநாச்சியம்மன், திருஆவினன்குடி ஆகிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின், பேட்டியளித்த அவர், “வரும் மே 4ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பார். அவரது குரல், கவர்னர் மாளிகையில் மீண்டும் ஒலிக்கும். இந்த 2026 தேர்தலில், ஓட்டுப்பதிவு அதிகரித்துள்ளதா, என்பதை கடந்த 2021 ஓட்டுப்பதிவு உடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள், ' ' என்றார்.

Advertisement