மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தானுக்கு தகுதியில்லை; ஈரான் எம்பி
டெஹ்ரான்: அமெரிக்காவுடனான போர் நிறுத்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் தகுதி பாகிஸ்தானுக்கு கிடையாது என்று ஈரான் எம்பி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் துவங்கி நடந்து வருகிறது. இந்தத் தாக்குதல் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தியை முடக்கி, சர்வதேச அளவில் எரிசக்தி பற்றாக்குறையை ஈரான் ஏற்படுத்தியது. இதனிடையே, பாகிஸ்தான் நடத்திய பேச்சின் வாயிலாக, ஈரான் - அமெரிக்கா இடையே மே 1ம் தேதி வரை போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
போர் பதற்றம் தணிந்திருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுக்கு பாகிஸ்தான் சமீபத்தில் அழைப்பு விடுத்தது. இதற்காக பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர், நேரடியாக அமெரிக்காவுடன் பேச்சு நடத்த மறுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த டிரம்ப் அமெரிக்க குழுவினரின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தார். இருதரப்பிற்கும் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தானின் மத்தியஸ்தம் குறித்து ஈரான் எம்பி இப்ராஹிம் ரெசாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில்; பாகிஸ்தான் ஒரு நல்ல நண்பர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு பொருத்தமான நாடு கிடையாது. ஏனெனில், பாகிஸ்தான் அமெரிக்காவின் நலன்களுடன் ஒத்துப்போகும் போக்குக் கொண்டது. அமெரிக்காவை வெளிப்படையாக விமர்சிப்பதை பாகிஸ்தான் தவிர்க்கிறது. லெபனான் விவகாரம் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்கள் உள்ளிட்ட விஷயங்களில் அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத இடங்களைச் சுட்டிக்காட்டத் தவறிவிட்டது. ஒரு மத்தியஸ்தர் பாரபட்சமற்றவராக இருக்க வேண்டும். எப்போதும் ஒரு பக்கமே சாய்ந்து கொண்டிருக்கக் கூடாது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இப்பதான் தெரிஞ்சிச்சாக்கும்?
இது தான் உண்மை. மத்தியஸ்தம் என்ற பெயரில் உதவி பெற பாகிஸ்தான் செய்யும் மோசடி
பாகிஸ்தான் மூக்கு சரியாக்க அறு பட்டு இருக்கு. தீவிர வாத நாடு என்றைய்க்கும் தன் சுய நலனை பேண தான் முன்னிற்கும். இந்தியாவோ உலகளவில் எல்லா நாடுகளுக்கும் சிறந்த நண்பர்களாக இருக்கு.
திராவிட நைனா வோட நைனா பாக்கிஸ்தான் அந்த நாட்டையே கேவலமா பேசுகிறார் இன்னொரு கேவலமான IRGC அரசாங்கத்தில் உள்ள ஒரு படுகேவலமான MP. ஈரான் ஒரு நல்ல மக்கள் உள்ள நாடு ஆனால் IRGC கையில் வைத்துள்ள மோசமான அரசாங்கத்தை அழிக்க வேண்டும்
நாடு அளவுகோல் உலகில் 10 சதவீத மக்கள் தொகை, 10 சதவீத பரப்பு, ஜனநாயக ஒழுங்குமுறை. பாகிஸ்தான் ஒரு ஆக்கிரமிப்பு பகுதி. ஒரு கொடியும், தன்னைத்தானே அதிபர் என்று கூறும் நபரிடம் அமெரிக்கா போன்ற பண்பட்ட நாடு மண்டியிடுவது மகாகேவலம். பாகிஸ்தான், வங்கதேசம் இந்தியர் பூமி. அங்கு இந்திய மக்கள் அண்டை மாநிலம் போல் சென்று வரும் காலம் உருவாக்க வேண்டும். அவர்கள் இந்தியாவில் நுழைய முன் அனுமதி பெற வேண்டும். ஈரான், பாகிஸ்தான் அணு, கொடிய ஆயுதத்தை சபையில் ஒப்படைக்க வேண்டும். மறுத்தால், இரு நாட்டு அணு உலையை அமெரிக்கா உடன் அழிக்க வேண்டும். அமெரிக்கா தடுமாறினால் வல்லரசு தகுதியை இழந்து விடும். பின் தடி எடுத்தவர் எல்லாம் தண்டல்காரர் என மாறி விடுவர்.
Pakistan deserves to be dealt with by Israel.
பாக்கிஸ்தானுக்கு எதற்குமே தகுதிஇல்லை.
யாருங்க பச்சை குழந்தைபோல் உள்ள பாகிஸ்தாநத்து அப்பாவிங்களை மத்தியஸ்தம் செய்ய தகுதி இல்லன்னு சொன்னது. இங்க இருக்கிற ஆசாமிகளுக்கு வலிக்குமில்ல ? ரத்த பாசம் இரானுக்கா இல்லாங்காட்டி பாகிஸ்தானுக்கா ஒரே கன்பீஸ் ஆ கீது மாமே ..
நம்ம ஸ்டாலின் சிறந்த நடு நிலைவாதியாக இருப்பார்
என்னங்க இப்படி பொசுக்குனு சொல்லி புட்டீங்க... இங்க இந்தியாவுல இருந்து கொண்டு, பாகிஸ்தானுக்கு ஜே போஸ்டு போடும் கும்பலை இப்படி கதற விடலாமா ? சொந்த நாட்டின் மேல் மரியாதை இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஆதரவு தரும் நடுநிலை நக்கிகள் இப்போது என்ன செய்வார்கள் ?மேலும்
-
இந்தியா - நியூசி., வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது
-
மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் முதல் 6 கூடுதல் ரயில்
-
பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும்; அமித் ஷா உறுதி
-
மக்கள் தான் என் குடும்பம்; மேற்கு வங்க பிரசாரத்தில் மோடி உருக்கம்
-
மே 1, 2ல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு
-
கோயில்களின் வழிபாட்டு முறைகளில் கோர்ட் தலையிட முடியுமா: சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் சாய்தீபக்கின் அனல் பறந்த வாதம்