ஜெர்மனி நிறுவனம் திருவள்ளூரில் ஆலை

சென்னை: ஜெர்மனி நாட்டை சேர்ந்த இ.பி.எம்., – பாப்ஸ்ட் நிறுவனம், மின்சார மோட்டார்கள், மின் விசிறி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனம், சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையத்தை விரிவுபடுத்தவும், ஐந்து ஆண்டுகளில், 201 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தியை அதிகரிக்கவும், தமிழக அரசுடன், 2025 செப்டம்பரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

அந்நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் மின் விசிறி ஆலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

Advertisement