தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தர முடியாது; தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு
சென்னை: சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்கமுடியாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்து இருக்கிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை;
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்தி அதையே காரணமாகவும் முன்னிறுத்தி மே 2ம் தேதியன்று வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளது, பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையும் அளிக்கிறது.
தயாரிப்பாளர்களின் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண அமைப்பு ரீதியாக வேண்டுகோள் விடுத்த போதெல்லாம் சந்திப்புகள் நிகழ்த்தியும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் உறுதுணையாக தென்னிந்திய நடிகர் சங்கம் இருந்து வரும் நிலையில், தன்னிச்சையாக இந்த வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது வருத்தத்திற்குரியது.
நடிகர்கள், கலைஞர்கள் அனைவரது வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வேலை நிறுத்தம் என்னும் அணுகுமுறையை என்றுமே தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரித்தது இல்லை, இனியும் ஆதரிக்காது. அத்துடன் தென்னிந்திய நடிகர் சங்கம் ஒருபோதும் தனது உறுப்பினர்களை வேலை நிறுத்தம் செய்யுமாறு அறிவுறுத்த சட்ட விதிகளில் இடமில்லை.
ஓர் ஆண்டுக்கு முன்னரே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னெடுப்பினால், தமிழ் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் இரு தரப்பினருக்கும் இடையே இணக்கமான சூழலை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்த வரைவை இறுதி செய்து ஒப்படைத்தும், இது நாள் வரை எந்த நகர்வும் இல்லை. இதுவரை எங்கள் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட நீண்ட புகார் பட்டியலில் உள்ள எந்த புகாருக்கும் தங்கள் தரப்பிலிருந்து எவ்வித தீர்வும் வழங்கப்படாமல் முடிவின்றி நீண்டு வருவதையும் மறுக்க இயலாது.
உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தையும், முதலீட்டையும் பிரதானமாக பாதிக்கக்கூடிய தன்னிச்சையான வேலை நிறுத்த அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும். முன்னரே இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டபடி சட்டசபை தேர்தல் முடிவுகள், மே 4ம் தேதி வெளியான பிறகு, இரு அமைப்பின் பிரதிநிதிகளும் சந்தித்து அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து தீர்மானிக்கலாம்.
இதனிடையே, கடந்த இரு தினங்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெகு வேகமாக பரவி வரும் தங்கள் அமைப்பின் சமீபத்திய பொதுக்குழு தீர்மானங்களின் நகலும், பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான செய்திகளும், தென்னிந்திய நடிகர் சங்கத்தையும், அதன் உறுப்பினர்களையும் மட்டுமே திரைத்துறையின் சிக்கல்கள் அனைத்திற்கும் முழுமையான காரணமாக வடிவமைத்து, சித்தரித்து வருவது பெரும் வேதனைக்குரியது. அது தவறான தகவல் எனில் மறுத்து சந்திப்பிற்கு முன் திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
துவக்க கால சினிமா போல, ஒரு குறிப்பிட்ட படத்தில் ஒப்பந்தம் ஆகும் கூத்தாடி அந்த படம் முடியும் வரை மாத சம்பளத்துக்கு மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்ற விதி வேண்டும்....ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே நடிக்க வேண்டும்... இந்த கூத்தாடிகளை நன்றாக இறுக்கி பிடித்தால் மட்டுமே சமூகம் உருப்படும்... டைரக்டர்/ தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம் போல நடிக்கவில்லை என்றால், பித்தலாட்டம் பொறுக்கி தனம் செய்தால் பிரம்பு எடுத்து வெளுத்தால் கூத்தாடி தலையெடுத்து ஆடமாட்டான்... கோடிகளில் சம்பளம் தேவையில்லை...
தயாரிப்பாளர்கள் கால வரையின்றி வேலை நிறுத்தம் செய்ய கோருகிறேன். அப்பதான் கூத்தாடி கும்பல்களிடமிருந்து நாடு விடுதலை பெறும்மேலும்
-
ஜப்பான் 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம்
-
சூடான் விமான விபத்தில் 14 பேர் பலி
-
சீனா மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பாக்., உடன் கையெழுத்து
-
சோமாலியா சிமென்ட் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் கடத்தல்
-
ஈரான் அமைச்சர் தொடர் பயணம்
-
3 நாளில் எண்ணெய் குழாய்கள் வெடிக்கும் புதிய கெடுவுடன் ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்