போதையில் கிணற்றில் விழுந்து ஓட்டுனர் பலி

ஓமலுார்; மது போதையில், கிணற்றில் விழுந்த ஓட்டுனர் உயிரிழந்தார்.

காடையாம்பட்டி தாலுகா, கஞ்சநாயக்கன்பட்டி ராக்கிபட்டியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி, 40. ஓட்-டுனர். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் நேற்று மாலை, 4:00 மணிய-ளவில் வீட்டின் அருகே உள்ள, கிணற்றின் திட்-டுவில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். போதையில் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். அப்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கிணற்றில் உயிரிழந்தார். ஊர் பொதுமக்கள் உடலை மீட்டனர். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement