திருப்பூர் மாவட்டத்தில் நீதிபதிகள் இடம் மாற்றம்

– நமது நிருபர் –: தமிழகம் முழுவதும் நீதித்துறையில் பணியாற்றும் சீனியர் நீதிபதிகள் நுாறு பேரை பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்து, சென்னை ஐகோர்ட் பதிவாளர் அல்லி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் இரு நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் சார்பு நீதிமன்றத்தில் பணியாற்றும் முதன்மை சார்பு நீதிபதி ஸ்ரீவித்யா, ஈரோடு முதன்மை குற்றவியல் நடுவராக மாற்றப்பட்டுள்ளார்.

கூடலுார் சார்பு நீதிபதியாகப் பணியாற்றி வரும் முகமது அன்சாரி, திருப்பூர் முதன்மை சார்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போல் நெய்வேலி சார்பு நீதிபதியாக பணியாற்றும் உமா மகேஸ்வரி, திருப்பூர் கூடுதல் சார்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வரும் கண்ணன் நெய்வேலிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement