தனியார் ஊழியர் வீட்டில் 3.5 பவுன் நகை திருட்டு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சாந்தபுரம் பகுதியில் உள்ள திருமலா ரெசிடென்சி பகுதியில் வசிப்பவர் கோகுலகி-ருஷ்ணன் மனைவி அன்னலட்சுமி, 30. டைட்டன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்; சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தன் குடும்பத்துடன் கோவை மாவட்டத்திற்கு கடந்த, 22ம் தேதி இரவு, 10:00 மணிக்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் மொட்டை மாடி கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த, 3.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்றரை பவுன் நகையை திருடி சென்றனர்.
கடந்த, 27ம் தேதி இரவு, 8:00 மணிக்கு வீட்டிற்கு திரும்பிய அன்னலட்சுமி, நகை திருட்டு போனது கண்டு அதிர்ச்சிய-டைந்தார்.
இது தொடர்பாக, நல்லுார் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியிலுள்ள, 'சிசிடிவி' கேம-ராவில் மர்ம நபர்கள் வந்து சென்றது பதிவாகியுள்ளதா
என பார்த்து, விசாரித்து
வருகின்றனர்.
மேலும்
-
சொல்கிறார்கள்
-
சொல்கிறார்கள்
-
தயார் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டுகள்நோய் பாதித்தால் தனி போர்டலில் பதிவேற்ற பயிற்சி
-
கோயில் திருவிழா
-
பால் குளிரூட்டும் இயந்திரங்களைபயன்இன்றி பூட்டி வைத்துள்ள ஆவின் பால் வீணாவதாக உற்பத்தியாளர்கள் புகார்
-
மதியம் விவசாய பணிகளை தவிர்க்கதோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்