தொழிலாளியை மணந்த கல்லுாரி மாணவி

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர், கோட்டைமேட்டை சேர்ந்தவர் சதீஷ், 26. தறித்தொழிலாளி. மகுடஞ்சாவடி அருகே ஒண்டிப்
பனையை சேர்ந்தவர் ஹேமா, 19. சேலம், கோரிமேட்டில், பி.எஸ்சி., முதலாண்டு படிக்கிறார்.

தொழில் விஷயமாக, சதீஷ் சேலம் சென்று வந்தபோது ஹேமா-வுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்தார்.

இது, சதீஷ் வீட்டினருக்கு தெரிய வர, இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். தொடர்ந்து நேற்று திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இருவரது பெற்றோரை அழைத்து பேசிய போலீசார், சதீஷூடன் மாண-வியை அனுப்பிவைத்தனர்.

Advertisement