புலிக்குட்டி உயிரிழப்பு

ஊட்டி: நீலகிரி வனக்கோட்டம், ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட அழகர் மலைப்பகுதியில் விவசாய தோட்டத்தில், 25ம் தேதி, இரு புலிக்குட்டிகள் தாயை பிரிந்து சுற்றித் திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. பிறந்து, 5 மாதமான, ஒரு பெண் புலிக்குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.

அந்த புலிக்குட்டிக்கு, சென்னை வண்டலுார் சிறப்பு கால்நடை மருத்துவர் ஸ்ரீதர், முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் சிறப்பு சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், புலிக் குட்டி நேற்று உயிரிழந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் மீட்கப்பட்ட மற்றொரு புலிக்குட்டிக்கு, வண்டலுார் உயிரியல் பூங்காவில் சிறப்பு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

Advertisement