வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டுகின்றனர்: ஆலங்குளம் பனை தொழிலாளி குமுறல்
- நமது நிருபர் -
'வழக்கை வாபஸ் பெறாவிட்டால், நடப்பதே வேறு' என, மர்ம நபர்கள் மிரட்டல் விடுப்பதாக, போலீஸ் எஸ்.ஐ., இசக்கிராஜாவால், துப்பாக்கியால் சுடப்பட்ட பனைத்தொழிலாளி மணிகண்டன் கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மருதம்புத்துாரை சேர்ந்தவர் மணிகண்டன்; பனைத்தொழிலாளி. இவர், கள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி, போலீஸ் எஸ்.ஐ., இசக்கிராஜா, துப்பாக்கியால் காலில் சுட்டதில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள, 'வீடியோ'வில் கூறியிருப்பதாவது: எனக்கு பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் போடுவதோ, மது குடிக்கும் பழக்கமோ இல்லை. எப்போதும் அத்தகையை பழக்கத்திற்கு அடிமையாகவும் மாட்டேன். நான் பனைத்தொழில் செய்து வருகிறேன். பதநீர் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் என்னை, கள் இறக்குவதாக குற்றம் சாட்டி, எஸ்.ஐ., இசக்கிராஜா மற்றும் அவருடன் வந்த போலீசார், மரத்தில் ஏற வைத்தனர். அவர்களிடம் பானையை கழற்றி காண்பித்தேன்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, என் சகோதரர், அவரது மகன், மகள் மற்றும் எங்களின் தந்தை ஆகியோர் வந்துவிட்டனர். எங்கள் சகோதரர் 'வீடியோ' எடுத்ததால் மொபைல் போனை தட்டிவிட்ட இசக்கிராஜா, வெளியில் சொல்லவே முடியாத வார்த்தைகளால் திட்டினார்.
என் மகனை அடிக்க பாய்ந்தார். நான் தடுத்ததால், நானும் அவரும் கீழே விழுந்து விட்டோம். அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு விட்டது. அந்த ஆத்திரத்தில் என் காலில் துப்பாக்கியால் சுட்டுவிட்டார். தற்போது, மர்ம நபர்கள், வழக்கை வாபஸ் பெற வேண்டும்.
சமரசமாக செல்லவில்லை என்றால் நடப்பதே வேறு என, மிரட்டல் விடுக்கின்றனர். நான் முழுமையாக குணமடையாத நிலையில், என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றவும், முயற்சி செய்தும் வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்களின் வாழ்வுரிமை கழகம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி வழக்கறிஞ்சர்கள் சிறிது சமூக சேவையையும் செய்யவேண்டும் .அதற்க்கு மக்களும் தங்கள் அன்பளிப்பை வழங்கவேண்டும் .இதுபோன்ற ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் அவசியம் தேவை .ஆட்சியில் இருப்பவர்களும் காவல்துறையும் கூட்டணிவைத்து மக்களை பலவகையிலும் துன்புறுத்துவதை அறிவுசார்ந்த சமூகம் அனுமதிக்கக்கூடாது .மேலைநாடுகளில் சிவில் ரைட்ஸ் ப்ரொடெக்ஷன் கவுன்சில் என்ற அமைப்புகள் இயங்குகின்றன .வசதியற்றோருக்கு உதவுகிறார்கள் .
பாஸ் மே 4 ம் தேதிக்குள் வாபஸ் வாங்குவது நல்லது, தீயமுக பதவி ஏற்ற உடனே உங்க மேல கஞ்சா கேஸ் போடுவானுங்க, மாரிதாஸ் சவுக்கு கிஷோர் எல்லாம் குண்டர் சட்டத்தில் கைது செய்ய படுவார்கள்
அந்த இசக்கியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்..தற்காலிக பணி நீக்கம் என்பது வேஸ்ட்.. டிஸ்மிஸ் செய்து சிறையில் அடைக்க வேண்டும்
சாத்தான் குளம் தீர்ப்பு வந்த பிறகும் இன்னும் சிலர் திருந்தாமல் தான் இருக்கிறார்கள்.
ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட வேண்டும் என்றால் மேலதிகாரியிடம் அனுமதி பெற வேண்டுமே. யார் அனுமதி கொடுத்தது? முறையான விசாரணை நடத்தப்பட்டு சாத்தான்குளம் சம்பவத்தில் ஈடுப்பட்ட போலீசாருக்கு வழங்கிய தண்டனைபோல் சட்டத்தை தன் கையிலெடுத்த இந்த போலீசாருக்கும் வழங்கவேண்டும்.
இன்றைக்கு காவல்துறை மக்களை காப்பற்றுவதை முற்றிலும் விட்டுவிட்டது. அரசியல்வியாதிகளின் அடியாள் கும்பலாக மாறிவிட்டது. குற்றவாளிகளுடன் நேரடியாகவே தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களுக்கு உதவுகின்றனர். லஞ்ச ஊழல்களால் கொழுத்து திரிகின்றனர். இன்றைக்கு காவல்துறை நேர்மையாக பணியாற்றினால் நம் நாட்டில் ஒரு குற்ற சம்பவம் கூட நடக்க முடியாது. இது எல்லோருக்கும் தெரியும். ஆனால், குற்றங்கள் பெருகுவதற்கு இன்றைக்கு இந்த ஏவல்துறையே காரணமாக இருப்பதுதான் உண்மை. திராவிடர்கள் ஒழிந்தால்தான் இது மாறும்
தல நீங்க நேரே ஒரு பாதிரியாரிடம் போயி பாவமன்னிப்பு கேட்டு உங்கள் பேரை ஜோசப் மணிகண்டன்னு மாற்றி விடுங்கள். பின்பு ஒரு திராவிடன் கூட உங்கள் பின்னாலே வராது. பத்தடி தள்ளி போயிடும்.
ஜலாலுதீன் ஜோசப் மணிகண்டன் என்று மாற்றி விட்டால் யாரும் நெருங்கமாட்டார்கள்
Colonial mindset has not been changed, even after independence Government servants, including politicians, are servants for the general public and not their bosses
ரவுடி SI இடம் இருந்து இவரை காப்பாத்தவேண்டும் . இவர் சம்பந்தப்பட்ட சங்கங்கள் இவருக்கு துணை நிற்க வேண்டும் .
இது மாடலின் அதிகார ஆட்சி.
இப்போது நடப்பது தேர்தல் ஆணையத்தின் ஆட்சிமேலும்
-
இடி, மின்னல், காற்று வந்தது மழை ஏனோ பொழியவில்லை
-
குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் பயிற்சி
-
மீண்டும் வெல்லுமா சென்னை * மும்பை அணியுடன் பலப்பரீட்சை
-
விஜய் கட்சிக்கு 41 சதவீதம் ஓட்டு : ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்
-
துாய்மை பணி செய்ய வந்த மஹாராஷ்டிரா எம்.பி.,: செஞ்சி கோட்டையில் அனுமதி மறுப்பு
-
சொத்து குவிப்பு வழக்கு உள்ளது என்பதற்காக அமலாக்கத்துறை தலையிட வேண்டியதில்லை: ஐகோர்ட்