வழக்குப்பதிய ரூ.1,500 லஞ்சம்: எஸ்.எஸ்.ஐ.,க்கு '2 ஆண்டு'
திருச்சி: திருட்டு தொடர்பாக வழக்கு பதிய, 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ.,க்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பெரம்பலுாரை சேர்ந்த மணிமாறன், 61, என்பவர், திருச்சி சிங்காரத்தோப்பில் தையற்கடை வைத்திருந்தார். உடல்நலக்குறைவால், கடையை சில நாட்கள் பூட்டி வைத்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, திருட்டு நடந்தது.
கடந்த, 2009 ஜூலை, 7ல் திருச்சி மாநகர கோட்டை குற்றப்பிரிவு போலீசில், மணிமாறன் புகார் அளிக்க சென்றார். அங்கிருந்த எஸ்.எஸ்.ஐ., முத்துக்குமார், வழக்கு பதிய, 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டார். மணிமாறன், திருச்சி ஊழல் தடுப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, எஸ்.எஸ்.ஐ., முத்துக்குமார், லஞ்சம் வாங்கிய போது கைதானார்.
திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், முத்துக்குமாருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி புவியரசு நேற்று உத்தரவிட்டார்.
வேலையை விட்டு தூக்குங்கள். காவல் துறையின் தூய செயல்பாடு மக்களின் அடிப்படை உரிமை. அதில் பல மனிதர்களை வைத்துக்கொண்டு கொள்ளை அடிக்கும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் வேரோடு அழிக்க வேண்டும்.மேலும்
-
அவிநாசி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் 'தள்ளுமுள்ளு'
-
பல்லடம் தொகுதியில் 35 சுற்று ஓட்டு எண்ணிக்கை
-
'நீட் தேர்வு பதட்டம் வேண்டாம்' கல்வித்துறையினர் அறிவுறுத்தல்
-
திருடிய பணத்தில் 'சொகுசு' வாழ்க்கை
-
ஜனநாயக கடமையில் ஏற்பட்ட வேதனை முதியவர்கள் அவதி: அதிகாரிகள் 'அசட்டை'
-
மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு இன்றும் நாளையும் விடுப்பு இல்லை * தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு