தபால் ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க த.வெ.க., முறையீடு
சென்னை: த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல்குமார், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேற்று சந்தித்து மனு அளித்தார்.
அதன்பின், அவர் அளித்த பேட்டி: ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லுகளை செய்து, குளறுபடிகளை ஏற்படுத்த தி.மு.க., முயற்சி செய்து வருகிறது.
எனவே, ஓட்டு எண்ணிக்கை அறையில், மத்திய பாதுகாப்பு படையினரை கூடுதலாக பணி அமர்த்த வேண்டும். தபால் ஓட்டுகள் யாரிடமிருந்து எங்கிருந்து வருகிறது என்பதை, பதிவேட்டில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
தபால் ஓட்டு எண்ணிக்கையை 'வீடியோ' பதிவு செய்து, அதை கட்சிகளுக்கு வழங்க வேண்டும். தபால் ஓட்டுகளை 'ஸ்கேன்' செய்ய வேண்டும்.
தபால் ஓட்டுகளை எண்ணி முடித்த பின், இயந்திரத்தில் உள்ள ஓட்டு எண்ணிக்கையின், கடைசி இரண்டு சுற்றுகளை தொடர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இவ்வாறு கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள்
-
சொல்கிறார்கள்
-
தயார் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டுகள்நோய் பாதித்தால் தனி போர்டலில் பதிவேற்ற பயிற்சி
-
கோயில் திருவிழா
-
பால் குளிரூட்டும் இயந்திரங்களைபயன்இன்றி பூட்டி வைத்துள்ள ஆவின் பால் வீணாவதாக உற்பத்தியாளர்கள் புகார்
-
மதியம் விவசாய பணிகளை தவிர்க்கதோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்
Advertisement
Advertisement