மூணாறில் கண்ணாடி' வாட்ச் டவர்' சுற்றுலா பயணிகள் வரவேற்பு
மூணாறு: மூணாறில் அரசு தாவரவியல் பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட கண்ணாடி 'வாட்ச் டவர்' சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.
கொச்சி- - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறில் பழைய அரசு கல்லூரி அருகே மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி கழகம் சார்பில் தாவரவியல் பூங்கா உள்ளது. அங்கு தனியார் ஒத்துழைப்புடன் ரூ. 3.60 கோடி செலவில் கண்ணாடி ' வாட்ச் டவர்' அமைக்கப்பட்டு ஏப். 19ல் பயன்பாட்டுக்கு வந்தது.
34 மீட்டர் நீளம் கொண்ட கண்ணாடி நடை பாலத்தில் சென்று தரையில் இருந்து 300 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட ' வாட்ச் டவரில்' இருந்து இயற்கையான சுற்றுச் சூழலை ரசிக்கலாம். ஒரே நேரத்தில் வாட்ச் டவரில் 30 பேர் செல்லலாம்.
இந்த கண்ணாடி வாட்ச் டவர் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த பத்து நாட்களில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கண்ணாடி வாட்ச் டவருக்கு சென்றனர்.
நபர் ஒன்றுக்கு ரூ.250, சிறுவர்களுக்கு ரூ. 200 கட்டணம் வசூலிக்கின்றனர்.
மேலும்
-
ஓட்டு எண்ணும் மையத்தில் மம்தா கட்சி வேட்பாளர்கள் தர்ணா; தேர்தல் ஆணையம் சொல்வது இதுதான்
-
தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
டிஜிட்டல் இந்தியா புதிய சாதனை; யுபிஐ பரிவர்த்தனை ரூ.314 லட்சம் கோடியைத் தாண்டியது
-
புத்த பூர்ணிமா கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரானுக்கு கச்சா எண்ணெயில் வருமானம் இல்லை; அதிபர் டிரம்ப்
-
பழனிசாமி குடும்பத்தினர் திருச்செந்துாரில் வழிபாடு