பிரதான குழாயில் உடைப்பு மாகரலில் வீணாகும் குடிநீர்

காஞ்சிபுரம்: மாகரலில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

காஞ்சிபுரம் ஒன்றியம், மாகரல் ஒட்டியுள்ள செய்யாற்றாங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு பல்வேறு ஊராட்சிகளுக்கு நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மாகரல் பிரதான சாலை, பெரிய தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

தொடர்ந்து வெளியேறும் குடிநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையும் சேதமடைந்து வருகிறது. எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement