ஆறுமுகம் சுழற்கோப்பை கிரிக்கெட் ஆர்வமுள்ள அணிகளுக்கு அழைப்பு

திருப்பூர்:மே மூன்றாவது வாரத்தில் ஆறுமுகம் சுழற் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது; இதில் பங்கேற்க ஆர்வமுள்ள அணிகள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2026 - 27ம் ஆண்டுக்கான ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி மே மாதம் மூன்றாவது வாரம் நடக்கவுள்ளது. இப்போட்டியில், திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் அணிகள் பங்கேற்கலாம். https://www.dcat.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் உள்ளது. ஆர்வமுள்ள அணிகள், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வரும், 16 ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு, என்ற எண்ணில், 9943440040 தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட கிரிக்கெட் சங்க மேலாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement